ஈரோடு, ஆக. 3- பெருந்துறை சிப்காட் விவ காரத்தில் சட்டம் தன் கடமைய செய்யவில்லை, கட்டி முடிக்கப் பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகி யும் பட்டியலின மக்களுக்கு ஒதுக் கப்படவில்லை, சட்டம் தன் கட மையை செய்யலாமல் தீண்டா மையை கடைபிடிப்பதாக மார்க் சிஸ்ட் கட்சியின் கந்தவர்வ கோட்டை சட்டப்பேரவை உறுப் பினர் எம்.சின்னதுரை குற்றஞ் சாட்டினார். ஈரோடு மாவட்டம், பெருந் துறை சிப்காட் வளாகத்தில் பட்டி யலினத்தவர்களுக்காக கடந்த 1996ஆம் ஆண்டு பின்னலாடை தொழிற்கூடங்கள் அமைக்கப் பட்டன. அதனை திறந்து அம்மக் களின் பயன்பாட்டிற்கு விடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய சின்ன துரை எம்எல்ஏ பேசுகையில், தமிழ் நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும் தான் பட்டியலின மக்களை தொழில் முனைவோராக்கும் வகையில் அரசாணை வெளியிட்டு தொழில் கூடங்கள் அமைக்கப் பட்டது. அவ்வாறு 31 ஆண்டு களுக்கு முன்னதாக 150 ஏக்கர் நிலம் தீர்மானிக்கப்பட்டு 28 கோடியே 38 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஒதுக் கீடு செய்து பெருந்துறை சிப்காட் வளாகத்தில் பின்னலாடை தொழிற் கூடங்கள் அமைக்கப்பட்டது. ஆனால் 30 ஆண்டுகள் ஆன நிலை யிலும் இந்த தொழிற்கூடங்கள் திறக்கப்படவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தலையிட்டு போராட்டம் நடத்தியி ருக்கிறார்கள். அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் தலையிட்ட பிறகும், முதலமைச்சர் தலையிட்டு உயர்நிலை கண்காணிப்புக்குழு கூட்டம் நடத்தப்பட்ட பிறகும் திறக்கப்படவில்லை. என்ன காரணம்? 200 கட்டடங்கள் பாழ டைந்து கிடக்கிறது. அரசு கட்ட டங்களுக்கு 30 ஆண்டுகள் தான் ஆயுள் என கணக்கிடப்படுகிறது. 28 கோடிக்கு லீசிற்கு வாங்கிய தாகக் கூறப்படும் 150 ஏக்கர் நிலம்
இன்றைய மதிப்பில் ரூ.450 கோடி பெறும். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மண்ணில் இவ்வாறு நடப்பது மிகுந்த வேதனையளிக் கிறது. கேரள மண்ணை மிதித்த தைப் பாவமாக நினைக்கிறேன் என விவேகானந்தர் சொன்னார். ஏனென்றால் சாதி பைத்தியத்தின் கூடாரமாக இருந்தது கேரளம். இன்று அந்த மண்ணில் சாதி ஒழிந்திருக்கிறது, தீண்டாமை ஒழிந்திருக்கிறது, சம உரிமை வந்தி ருக்கிறது என்றால் அங்கே ஆட்சி நடத்திக் கொண்டிருப்பது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பது தான். அங்கே தீண்டாமை ஒழிக்கப் பட்டதற்குக் காரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை பெரு மையோடு சொல்கிறோம். ஆனால் எந்த கேரளத்திற்குள் பெரியார் சென்று ஆலயப் பிரவேசம் செய்தாரோ அங்கே தீண்டாமை ஒழிந்து விட்டது. ஆனால் பெரியார் பிறந்த மண்ணில் தீண்டாமை ஒழிந்திருக் கிறதா? சிப்காட் வளாகத்தில் தீண்டாமை ஒழிந்திருக்கிறதா? மாவட்ட ஆட்சியர், காவல் கண் காணிப்பாளர், தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்கிற கேள்வி எழுகிறது. சட்டம் தன் கடமையைச் செய்யும் என் கிறீர்கள். ஆனால் 30 ஆண்டுகளாக கடமையை செய்ய வில்லையே, உடனடியாக சிப்காட் வளாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப் பட வேண்டும், அதற்கான போராட் டத்தை நாங்கள் இனி தீவிரப்படுத்து வோம் என்றார்.