districts

img

பெரியார் பல்கலைக்கழக கலைஞர் ஆய்வு மையக் கட்டுமானப் பணிகள் தொடக்கம்

சேலம், பிப்.18- சேலம், பெரியார் பல்கலைகழ கத்தில் கலைஞர் ஆய்வு மையக்கட்டு மான பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி துவக்கி வைத் தார்.  பெரியார் பல்கலைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி எஸ். ஆறுமுகம் முயற்சியில் சேலம் மாவட்ட  திமுக சார்பில் ரூ.ஒரு கோடி நிதி வழங் கப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு முத் தமிழறிஞர் தமிழவேள் கலைஞர் மு. கருணாநிதி ஆய்வு மையம் தொடங் கப்பட்டது. இதனிடையே கலைஞர் ஆய்வு மையத்திற்கு பிரத்யேக கட்டடம்  கட்ட தமிழ்நாடு அரசு ரூ.2 கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டது. தரைத்தளம்,  முதல் தளத்துடன் 7,080 சதுர அடி பரப் பளவில் கலைஞர் ஆய்வு மையக் கட்டடம் உருவாக்கப்பட உள்ளது. இதில் பெரியார் இருக்கை, அண்ணா இருக்கை மற்றும் கலைஞர் ஆய்வு மையம் செயல்பட உள்ளது. இதில்  நூலகம், கூட்ட அரங்கம் உள்ளிட்டவை  அமைய உள்ளது.  பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் ரூ.2 கோடி நிதியுத வியுடன் அமைய உள்ள கலைஞர் ஆய்வு மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா சனியன்று நடைபெற்றது. உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி முத்தமிழறிஞர் தமிழவேள் கலைஞர் ஆய்வு மையத்திற்கு அடிக்கல் நாட்டி,  கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

முன்னதாக விழாவில் அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது, தமிழ் நாட்டின் எதிர்காலம் மாணவர்கள்தான். அதற்காக நான் முதல்வன், ஸ்கில் டெவலப்மென்ட் போன்ற பயிற்சிகளை மாணவர்கள் முழுமையாக பெற வேண் டும். தமிழ்நாட்டைப் பற்றி, தமிழ் மொழி யைப் பற்றி அதிகமாக ஆய்வுகள் நடத் தப்பட வேண்டும். இன்றைக்கு அம் பேத்கர் கொள்கைக்கு யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள். பெரி யார், அம்பேத்கருடன் நெருங்கி பழகி யவர். தமிழகத்தில் அம்பேத்கர் கொள்கைகளை கொண்டு வந்தவர் பெரியார். எல்லோரும் சமம். எல் லோரும் மனிதர்கள் என்பதை திராவிட  இயக்கம்தான் கொண்டு வந்தது. வகுப்புக்கு ஒரு பெண் மட்டுமே பயின்று  வந்த காலம் போய் 80 சதவிகிதம் பெண்கள் பயில்கின்றனர். பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 2  செமஸ்டரில் தமிழை ஒரு பாடமாக கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில்  நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.  கலைஞரின் பணிக்காக மட்டுமே ஆய்வு  மையம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரி யார் பல்கலைக்கழக மாணவிகள், பெரியார் மற்றும் கலைஞரை பற்றி  நால்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். 14 வயதில் தொடங்கி கடைசி  வரை கலைஞரின் பேனா எழுதிய தால்தான் எங்களைப் போன்றவர்கள் கல்லூரிகளில் படிக்க முடிந்தது. தமிழக மக்களை உருவாக்கியது. மாபெரும் தமிழ்கனவு திட்டத்தில் கல்லூரிக்கு 50 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பேசும் திறனை வளர்க்க  உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. எல்லா துறையிலும் மாணவர்கள் தங்களது ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

தமிழ்நாடு என்பதே கொஞ்சம் பேருக்கு பிடிக்கலை. வெறும் புத்த கம் மட்டுமே படிக்காமல் எல்லாவற் றையும் தெரிந்து கொண்டால்தான் சரி யாக இருக்கும். எல்லோரும் ஒருங்கி ணைந்து இந்தப் பணியை செய்ய வேண்டும். தமிழ்நாட்டிற்கென தனி யாக கல்விக் கொள்கையை வகுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.5-ஆம் வகுப்பு, 8-ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு என்பதை ஏற்க முடியாது.  தமிழ் நாடு, தமிழ் உணர்வு என்று செயல்பட வேண்டும். வெளிநாட்டிற்கு ஆங்கிலம்,  உள்ளூருக்கு தமிழ் என 2 மொழிகள் மட்டுமே போது, இருமொழிக் கொள் கையே தமிழகத்திற்கு போதும். இதை  எதிர்த்து எந்த திட்டம் வந்தாலும் அதை  மீறி இருமொழிக் கொள்கையை முதல மைச்சர் ஸ்டாலின் நிச்சயம் செயல்படுத் துவார்.  எங்கு சென்றாலும் மொழி உணர்வு, நாட்டு உணர்வு இருக்க வேண்டும். அனைவரும் சமம், ஆண்  பெண் சமம் என்பதை ஏற்று அனை வருக்கும் பரப்ப வேண்டும் என்றார்.  இந்நிகழ்ச்சியில், பெரியார் பல் கலைக்கழகத் துணைவேந்தர் இரா.ஜெகநாதன், பதிவாளர் இரா.பாலகுரு நாதன், கலைஞர் ஆய்வு மைய இயக் குநர் இரா.சுப்ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.