districts

img

பனமரத்துப்பட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை

சேலம், ஜூன் 1- பனமரத்துப்பட்டி பகுதியில் மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் அதிகமுள்ளதால் இப்பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைத்து வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என மாதர்  சங்க பனமரத்துப்பட்டி ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் பனமரத்துப்பட்டி ஒன்றிய முதல் மாநாடு  பனமரத்துப்பட்டி பகுதியில் நடைபெற்றது.  சங்கத்தின் கொடியை லட்சுமி அம்மாள் ஏற்றி  வைத்தார். ஒன்றிய தலைவர் கோகிலா  தலைமையில் நடைபெற்ற மாநாட்டை  மாவட்ட உதவித்தலைவர் கே.ராஜாத்தி  துவக்கி வைத்து உரையாற்றினார். வேலை  அறிக்கையை ஒன்றிய செயலாளர் தனசுதா சமர்பித்தார். இதில், மாவட்ட உதவி செயலா ளர் ஆர்.வைரமணி, மார்க்சிஸ்ட் கட்சியின்  ஒன்றிய செயலாளர் சுரேஷ், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.சாமியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், சிங்காரத்தோப்பு பகுதி யில் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள வீடு களுக்கு நிரந்தர பட்டா வழங்க வேண்டும். பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் சாலை, சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட  அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இப்பகுதி முழுவதும் காய் கள், பழங்கள், மல்லிகை, ரோஜா பூக்கள்  பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வேலை வாய்ப்பை உருவாக்கும் வகை யில் பூக்கள் மூலம் வாசனை திரவியம் தயா ரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு

இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய ஒன் றிய தலைவராக எஸ்.கோகிலா, செயலாள ராக  டி.தனசுதா, பொருளாளராக வி. மேகலா, உதவித்தலைவர்களாக லட்சுமி  அம்மாள், கலைச்செல்வி, உதவி செயலா ளர்களாக மகேஸ்வரி, காளியம்மாள் உட் பட 13 பேர் ஒன்றிய குழு தேர்வு செய்யப் பட்டது. முடிவில், மாவட்ட தலைவர் டி.பர மேஸ்வரி நிறைவுரை ஆற்றினார்.