districts

img

கல்வி உதவித்தொகைக்கான திறனாய்வு தேர்வு

திருப்பூர், பிப்.27- கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்கான கல்வி  உதவித்தொக்கான திறனாய்வு தேர்வு ஞாயிறன்று நடை பெற்றது. தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்ப தற்காக ஊரக திறனாய்வுத் தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி  உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவ, மாண விகள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4  ஆண்டுகள் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9  ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த தேர்வு  எழுத தகுதி உடையவர்கள். அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண் டும். அதனடிப்படையில் விண்ணப்பித்த மாணவ, மாணவிக ளுக்கு ஞாயிறன்று தேர்வு நடைபெற்றது. திருப்பூர் ஜெய்வா பாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டி ருந்த தேர்வு மையத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து  நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வை எழுதி னர்.