districts

img

வங்கி கடன் பெற அழைக்கழிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள்

ஆட்சியரிடம் மனு தருமபுரி, ஏப்.25- வங்கி கடனுக்காக, வங்கி மேலா ளர்  6 மாதமாக அழைக்கழிக்க வைப்ப தாக குற்றஞ்சாட்டி தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட் டம், கிளானூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் (45), திருப்பதி (49), சின்ன ராஜ் (47), அஞ்சலி (35) ஆகிய மாற் றுத்திறனாளிகள், ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்ப தாவது, எங்களுக்கு விவசாய நிலம் இல்லை. வேறு எந்த வருவாயும் இல்லை. குடும்ப உறுப்பினர்களை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். வங்கி கடன் பெற்று கறவை மாடு  வாங்க முடிவு செய்து, நான்கு பேரும் தாட்கோ மூலம் கடன்பெற கடந்த 6  மாதங்களுக்கு முன் தீர்த்தமலை கனரா வங்கி மேலாளரை சந்தித்து கடன் வழங்க விண்ணப்பித்தோம். வங்கி மேலாளரும் கடன் தருவதாக தெரிவித்தார். இதனையடுத்து கடனுக்கான மானிய கடிதத்தை, கனரா   வங்கிக்கு  தாட்கோ மேலாளர் அனுப்பியதாக  தெரிவித்தார். இதனையடுத்து, கனரா வங்கி மேலாளரிடம் கடன் வழங்க மறுக்கிறார். கடந்த 6 மாதமாக கடன் வழங்காமல் அழைக்கழிக்கப்படுவ தாகவும், நாங்கள் சுயமரியாதை யோடு வாழ்வதற்கு வங்கி கடனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சி யர் சாந்தி, உரிய நடவடிக்கை எடுப்ப தாக நம்பிக்கை தெரிவித்தார்.