தருமபுரி பிப்-17, மாற்றுத்திறனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்கக் கோரி தருமபுரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கட்டரசம்பட்டி சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் காந்தி அண்ணாமலை, அரூர் நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலைஞர்கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடுவழங்கக்கோரி சில மாதங்களுக்கு முன் மனு கொடுத்திருந் தனர். பலமாதங்களாகியும் வீடு வழங் கவில்லை. தொடர்ந்து வலியுறுத்தியும், எதனையும் அதிகாரிகள் பொருட் படுத்ததாத நிலையில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் சங்கத்தின் சார்பில் அரூர் கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு படுத்து உருண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்த கோட்டாட்சியர் சின்னசாமி, 10 நாட்களுக்குள் வீடு வழங்குவதாக எழுத்துப் பூர்வமாக உறுதி யளித்ததின் அடிப்படையில் தர்ணா போராட் டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.