districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பொது இடத்தில் துப்பாக்கிகளை வீசிச்சென்ற நபர்கள்

தருமபுரி, ஏப்.9- பால்சிலம்பு மலைக்கிராமத்தில் 4 கள்ளத்துப்பாக்கிகளை அடையாளம் தெரியாத நபர்களால் பொது இடத்தில் வீசிச் சென்ற சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்ட வன அலுவலர் உத்தரவுபடியும் மற்றும்  அரூர் உதவி வனப்பாதுகாவலர் அறிவுரையின்படி கடந்த பிப். 28 ஆம் தேதியன்று வேட்டைத்தடுப்பு மற்றும் தீ தடுப்பு  விழிப்புணர்வு முகாமில், பொதுமக்களுக்கு ஒரு அறி விப்பு செய்தனர். அதில் வேட்டைக்கு பயன்படுத்த கள்ளத்த னமாக வைத்திருக்கும் நாட்டு துப்பாக்கிகள் ஏதேனும் இருக் கும் பட்சத்தில், ஊர் பொது இடத்தில் வீசப்பட்டால் வழக்கு  ஏதும் தொடரப்படாது. மேலும், தங்களுக்கு துப்பாக்கியை ஒப்படைக்க வாய்ப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இதன்பின் பால்சிலம்பு கிராம வனக்குழு தலைவர் பூபா லன், ஊர்மக்களை ஒன்று கூட்டி கள்ள நாட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மாரியம்மன் கோவில் அருகே போட்டுவிடுமாறு கூறப்பட்டது. இதன் விளைவாக கள்ள கிரா மத்தின் பொது இடத்தில் 4 நாட்டுத்துப்பாக்கிகள் வீசப்பட் டுள்ளதாக பால்சிலம்பு வனக்குழு தலைவர் மூலம் மாவட்ட  வன அலுவலர் மற்றும் உதவி வனப்பாதுகாவலர் ஆகி யோர் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த மொரப்பூர் வனச்சரக அலுவலர் மு. ஆனந்தகுமார் தலைமையிலான வனத்துறையினர் 4 துப்பாக் கிகளையும் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

தேர்தல் விழிப்புணர்வு பேரணி

சேலம், ஏப்.9- 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியு றுத்தி சேலத்தில் நடைபெற்ற விழிப்பு ணர்வு பேரணியில் திரளானோர் கலந்து கொண்டனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொது மக்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல் வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகி றது. இதன்தொடர்ச்சியாக சேலம் மாவட்டம்,  அழகாபுரம் காவல் நிலையம் அருகே மாற் றுத்திறனாளிகள் மற்றும் கல்லூரி மாணவி கள் நடனமாடி, வாகன பேரணியில் கலந்து கொண்டனர். இப்பேரணியை மாவட்ட தேர் தல் அலுவலர் ரா.பிருந்தாதேவி தொடங்கி  வைத்தார். 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் மூன்று சக்கர வாகனத்தில் சேலம்  பேரலன்ஸ் பகுதியில் இருந்து அழகாபுரம், 5  ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஓபிஎஸ்சா..! இபிஎஸ்சா..! ஜி.கே.வாசன் குழப்பம்

நாமக்கல், ஏப்.9- குமாரபாளையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் பேசுகையில், கூட்டணி கட்சி தலை வர் ‘ஓபிஎஸ்’ என்பதற்கு பதிலாக ‘இபிஎஸ்’  என்றதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந் தனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத் தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட் சியின் வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து,  அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வாகன  பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பள்ளிபாளையம் பிரிவு சாலையில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து அவர் கூட்டணி தலை வர்களின் பெயர்களை உச்சரிக்க தொடங் கினார். அண்ணாமலை, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் ஆகியோர் பெயரை  உச்சரித்த பிறகு, ‘ஓபிஎஸ்’ (ஓ.பன்னீர்செல் வம்) எனக்கூறுவதற்கு பதிலாக ‘இபிஎஸ்’ (எடப்பாடி பழனிச்சாமி) ஆதரவு பெற்ற வேட் பாளர் என்றார். இது அங்கிருந்த தொண் டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத் தியது. சிறிது நேரம் பேசிவிட்டு ஜி.கே.வாசன்  அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இவர் இதற்கு முன்னதாக ஸ்ரீபெரும்பு தூர் தொகுதியில் சைக்கிள் சின்னத்திற்கு வாக்கு கேட்பதற்கு பதிலாக, பழைய கட்சி  நினைப்பில் பழக்க தோஷத்தில் கை சின் னத்திற்கு வாக்குகளை கேட்டு பிறகு  சுதாரித்து சமாளித்தார். குமாரபாளையத்தில் ஓபிஎஸ் என்பதற்கு பதிலாக இபிஎஸ் என கூறுகிறாரே யார் யார் எந்தக் கூட்டணியில் உள்ளனர்? நாம் எந்த கூட்டணியில் உள் ளோம் என்பதை அடிக்கடி ஜி.கே.வாசன் மறந்து விடுகிறாரோ என கட்சியினர் முனு முனுத்தப்படியே கலைந்து சென்றனர்.

ஏரியில் கொட்டப்பட்ட குப்பையில் தீ

ஏரியில் கொட்டப்பட்ட குப்பையில் தீ நாமக்கல், ஏப்.9- ராசிபுரம் அருகே ஏரியில் கொட்டப்பட்ட குப்பையில் ஏற்பட்ட தீயை, தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்த னர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், கோனேரிப்பட்டி பகுதியில் சுமார் 100 ஏக்கர் அளவிற்கு ஏரி உள்ளது. கடும்  வெயில் காரணமாக வறண்டு காணப்படும் இந்த ஏரியின்  கரையோர பகுதிகளில் ராசிபுரம் நகர் பகுதியில் உள்ள  இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை கொட்டுகின்றனர். நகர் பகுதியில் உள்ள பொதுமக்களும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பைகளை பல  ஆண்டுகளாகவே கொட்டி வருகின்றனர். இதனால் ஏரியின்  கரையோர பகுதி குப்பை மேடாக காட்சியளித்து வந்தது.  இந்நிலையில், ஏரியின் கரையோரப் பகுதியில் கொட்டப்பட் டுள்ள குப்பைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து  சென்றுள்ளனர். இதனால் குப்பை கொழுந்து விட்டு எரிந்தது.  மேலும், ஏரியின் பல பகுதிகளுக்கு தீ பரவியதில் செடி,  கொடிகள், மரங்கள் தீக்கிரையாகின. இதுகுறித்து தகவல றிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராசிபுரம் தீயணைப் புத் துறையினர் ஒரு மணி நேரமாக போராடி தீயை  அணைத்தனர். முன்னதாக, வெளியேறிய கரும்புகை யானது ராசிபுரம் - ஆத்தூர் சாலை பகுதி முழுவதும் பரவி யதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

பெரும்பள்ளம் அணை நீரின்றி வறண்டது 

ஈரோடு, ஏப். 9- 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணை நீரின்றி வறண்டு காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட  பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர்  விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்ப குதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாச னத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருவ தால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வரு கிறது. இதனையடுத்து ஞாயிறன்று காலை நிலவரப்படி அணை யின் நீர்மட்டம் 47.28 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஒரு  மாதத்திற்கும் மேல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடிக்கு கீழ் வருவது குறிப்பிடத்தக்கது. கீழ்பவானி  வாய்க்கால் பாசனத்திற்கு 5 கனஅடி தண்ணீர் திறக்கப்பட் டுள்ளது. காளிங்கராயன் வாய்க்கால் பாசனம், தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனம் ஆகிய வற்றுக்கு திறக்கப் பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி  ஆற்றுக்கு தற்போது 200 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல் குண்டேரிப் பள்ளம் அணையின் நீர்மட்டம்  ஞாயிறன்று காலை நிலவரப்படி 33.81 அடியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23.40 அடியாக உள்ளது. அதே சமயம் 30.84 அடி கொள்ளளவு கொண்ட  பெரும்பள்ளம் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்  வரத்து இன்றி அணை முழுமையாக வறண்டு காணப்படு கிறது. ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அணைகளில் நீர்மட் டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஏப். 9- தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின்  சார்பில்  ஈரோடு பொது மேலாளர் அலுவலக வளாகத்தில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின்  சார்பில்  ஈரோடு பொது மேலாளர் அலுவலக வளாகத்தில்  சம்பள நிலுவை, இபிஎப், இஎஸ்ஐ நிலுவை, சமூக நலப் பாது காப்பு திட்டங்கள் மற்றும் தொழிலாளர் நலச் சட்டங்கள் அமுல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஆர்.சாந்தகுமார் தலைமை வகித்தார். ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சையது இத்ரீஸ் சிறப்புரையாற்றினார். ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.குப்புசாமி, நிரந்தர  ஊழியர் சங் கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் செல்வராஜ், மாவட்டச்  செயலாளர் எஸ்.பாலு, ஒப்பந்த ஊழியர் சங்க மாநில அமைப் புச் செயலாளர் தம்பிகலையான், மாவட்டச் செயலர் கண்ணப் பன் ஆகியோர் போராட்டத்தை விலக்கி பேசினர். இறுதியாக  ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் டெலிபோன் பவன் கிளைப் பொரு ளாளர் ஈஸ்வரன் நன்றி கூறி போராட்டத்தை நிறைவு  செய்தார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மனு கொடுக்கப் பட்டது. இதில் ஓய்வூதியர் சங்க மாவட்டப் பொருளாளர் மணியன், மாவட்ட சங்க நிர்வாகி வீரப்பன் உட்பட ஒப்பந்த  ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மூங்கில் காட்டில் தீ விபத்து

மூங்கில் காட்டில் தீ விபத்து உதகை, ஏப். 9-  மசினகுடி வனத்திலுள்ள ஆச்சக்கரை பகுதியில் உள்ள  மூங்கில் காட்டில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல வனப் பகுதியான மசினகுடி வனத்திலுள்ள ஆச்சக்கரை பகுதியில் உள்ள மூங்கில் காட்டில் திடிரென தீ  விபத்து ஏற்பட்டது. வனத் துறையினர் அணைக்க முயன்றும்  முடியாததால், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. பின்பு சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப் புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத் தனர். இருப்பினும் மூங்கில் உள்ளிட்ட தாவர வகைகள் எரிந்து  தீக்கிரையானது.

ஈரோடு: இதுவரை ரூ.3.63 கோடி பறிமுதல்

ஈரோடு: இதுவரை ரூ.3.63 கோடி பறிமுதல் ஈரோடு, ஏப். 9- ஈரோடு மாவட்டத்தில் இதுவரை தேர்தல் பறக்கும்படையி னர் ரூ.3.63 கோடி பறிமுதல் செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில்  பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர  வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிர வாகன  சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவ ணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணங்களை பறிமுதல்  செய்யப்படுகிறது.  ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந் துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் என மாவட் டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை  தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் உரிய ஆவ ணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3 கோடியே 63  லட்சத்து 66 ஆயிரத்து 3 பறிமுதல் செய்துள்ளனர். இதில்  உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 32 லட்சத்து 30 ஆயிரத்து 183 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 1 கோடியே 31 லட்சத்து 35 ஆயிரத்து 820  பணம் மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. உரிய  ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெறலாம் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கார் - பேருந்து மோதி விபத்து  கைக்குழந்தை உட்பட 5 பேர் பலி

திருப்பூர் ஏப். 9 - திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே திங்க ளன்று நள்ளிரவில் அரசு பேருந்தும், காரும் மோதிக்கொண்ட  விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.  திருப்பூர் மாநகராட்சி, நல்லூர் அருகே புது நகர் 7 ஆவது  வீதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் காரில் திருக்கடையூர் கோயிலுக்கு சென்று  விட்டு திங்களன்று இரவு திருப்பூர் நோக்கி வந்து கொண்டி ருந்தனர்.  சந்திரசேகரன் (60), அவருடைய மனைவி சித்ரா (57),  மூத்த மகன் சசிதரன் (30), அவரது மனைவி  அருவிவித்ரா (30),  இவர்களது மூன்று மாத பெண் குழந்தை சாக்க்ஷி ஆகியோர்  பயணித்த காரை, சந்திரசேகரனின் இளைய மகன் இளவர சன்(26) ஓட்டி வந்தார். வெள்ளகோயில் - காங்கேயம் தேசிய  நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே வந்த போது, திருப்பூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்தும்,  இவர்களது காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.  இதில் சசிதரன் தவிர மற்ற ஐந்து பேரும் பலத்த காயம்  அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சசிதரன்  காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக அரவக்குறிச்சி  பணிமனையை சேர்ந்த ஓட்டுநர் சாமிநாதன் மீது வெள்ளகோ வில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  காங்கேயம் டிஎஸ்பி பார்த்திபன், வெள்ளகோயில் காவல்  நிலைய உதவி ஆய்வாளர் எஸ். ஞானப்பிரகாசம் ஆகியோர்  சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற் கொண்டனர். சந்திரசேகரனின் 60 ஆம் கல்யாணத்தை முன் னிட்டு திருக்கடையூர் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்தபோது இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. 

தொழில்துறை வளர்ச்சிக்கு அற்புதமான திட்டங்கள்: டி.ஆர்.பி.ராஜா

கோவை, ஏப்.9- தொழில்துறை முன்னேற்றத்துக்கு அற்புத மான திட்டங்களை வகுத்து வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித் தார்.  இந்தியா கூட்டணியின் கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை  ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் பிரச்சாரம் மேற்கொண்டார். இப்பிரச்சாரக் கூட்டத்தில், தமிழ் நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டார்.  இதைத்தொடர்ந்து, பத்திரிகையாளர்களை சந் தித்து பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஒவ் வொரு நாளும் நமது அணிக்கு மகத்தான பலம் சேர்ந்து வருகிறது. தேர்தல் அறிக்கைகளில் சொல் லப்பட்ட வாக்குறுதிகளை கொண்டு சேர்த்து வருகி றோம். தொழில் வளர்ச்சிக்கு மகத்தான, அற்புத மான திட்டங்களை வகுத்து வருகின்றோம். ஒவ் வொரு துறைக்கும் தகுந்த தொழில் வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. வருகின்ற தேர் தலிலே, திமுகவுக்கு மகத்தான வெற்றியை தர பெண்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  தேர்தல் நேரத்தில் பல்வேறு கோரிக்கைகள் தெரிய வருகின்றன. மிகவும் வேகமாக தமிழ் நாடு அரசாங்கம் செயல்படுகிறது. எக்ஸ் பக்கத்தில்  பதிவு போடுவதற்கும் தொடர்பான கேள்விக்கு,  உடனடியாக முதலமைச்சர் ரிப்ளே செய்கிறார். அந்த அளவுக்கு வேகமாக முதல்வர் பணியாற்று கிறார், என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந் திருக்கின்றன. விளையாட்டில் இளைஞர்கள் ஆர்வமுடன் இருக்கின்றார்கள். கிரிக்கெட் மைதா னம் கேட்டார்கள், உடனடியாக அந்த கோரிக் கையை முதல்வரிடம் தெரிவித்தோம். சர்வதேச  தரத்திலான மைதானம் அமைக்க படிப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றார் கள். உலகத்தரமான கிரிக்கெட் மைதானம் அமைக் கப்படும் என முதல்வர் தெரிவித்தமைக்கு நன்றி  தெரிவித்துக் கொள்கிறோம்.  நான் தொழில்துறை அமைச்சராக ஓராண்டு களாக பொறுப்பில் உள்ளேன். இந்த தேர்தல்  நேரத்தில் தொழில்துறை சார்ந்தும், பல்வேறு தரப் பினரை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட் டுள்ளேன். இன்னும் மூன்று மாத காலம் இங்கு இருக்க உள்ளேன். தேர்தல் பணியின்போது, கோவைக்கு தேவையான தொழில் வளர்ச்சிகளை யும் பார்க்க முதலமைச்சர் தெரிவித்து இருக்கின் றார். தொழில்துறையினரின் வளர்ச்சிக்கு தேவை யான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூருக்கு மகத்தான வளர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. அண்ணாமலை குறித்து கேட்ட  பொழுது, நான் கோயம்புத்தூரின் வளர்ச்சி பற்றி  பேசுகிறேன். வெட்டியாக பேசுபவர்களை பற்றி பேச விரும்பவில்லை, என்றார். இந்த பேட்டியின்போது, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், பகுதிக் கழக செயலாளர் மார்க்கெட் மனோகரன் உள் ளிட்ட பலர் உடனிருந்தனர்.

4223 பேர் தபால் வாக்குப்பதிவு
4223 பேர் தபால் வாக்குப்பதிவு கோவை, ஏப்.9- 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளி வாக்கா ளர்களில், தபால் வாக்கு அளிக்கப்பட்டவர்களில் கோவை தொகுதியில் 2,071 பேரும், பொள்ளாச்சி தொகுதியில் 2,152  பேரும் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்.19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குப் பதிவு மையங்களுக்குச் சென்று வாக்குப் பதிவு செய்வதைத் தவிர்க்கும் விதமாக தபால் வாக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வாக்காளர்களின் விருப்பத்தின்பேரில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தபால் வாக்கு அளிக்க விருப்பமுள்ள 85  வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்க ளிடம் படிவம் 12டி வழங்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி, மாவட்டத்துக்குட்பட்ட கோவை மக்களவைத் தொகுதியில் தபால் வாக்களிக்க மூத்த வாக்காளர்கள் 2,570 பேர், மாற்றுத்திறனாளிகள் 424 பேர், பொள்ளாச்சி தொகுதி யில் மூத்த வாக்காளா்கள் 2,085 பேர், மாற்றுத்திறனாளிகள் 567 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, இவர்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கைப் பெறுவதற்காக வாக்குப்பதிவு அலுவலர், நுண்பார்வையாளர் ஆகியோர் அடங்கிய குழுக்கள் கோவை  தொகுதியில் 70, பொள்ளாச்சி தொகுதியில் 75 என்கிற அள வில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தபால் வாக்குப்பெறும் நடைமுறை ஏப்ரல் 5, 6 ஆகிய இரண்டு நாட் கள் நடைபெற்றன. இதில் கோவை தொகுதியில் மூத்த வாக்காளர்கள் 1,754 பேர், மாற்றுத்திறனாளிகள் 317 பேர் என மொத்தம் 2,071 பேரும், பொள்ளாச்சி தொகுதியில் மூத்த  வாக்காளர்கள் 1,684 பேர், மாற்றுத்திறனாளிகள் 468 பேர் என மொத்தம் 2,152 பேரும் தபால் வாக்கு அளித்துள்ளனர்.

பிரதமர் நிலை பரிதாபமாக உள்ளது: செல்வப்பெருந்தகை கிண்டல்

கோவை, ஏப்.9- அடிக்கடி தமிழகம் வரும் பிரதமர் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது, வரும் உள்ளாட்சி தேர்தலின் போது  தெருத் தெருவாக் சென்று வாக்குசேக ரிக்க போகிறார் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கிண்டலடித்துள் ளார். கோவை மாவட்டம், செட்டிபாளை யம் பகுதியில் இந்தியா கூட்டணி சார் பில் வரும் ஏப்.12 ஆம் தேதி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.  இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகி யோர் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப் பட்டு வருகிறது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலை வர் செல்வப்பெருத்தகை நேரில் பார் வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, கோவை யில் மிக பிரம்மாண்டமாக பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் அம ரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. வரும் 12 ஆம் தேதி  கூட்டத் திற்கு பிறகு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா அளவில் பெரிய திருப்பம் ஏற் படும். இக்கூட்டத்தில் முக்கிய பிரகட னங்கள் செய்யப்பட இருக்கின்றது. மோடி ”ரோடு ஷோ” குறித்த கேள் விக்கு, நாட்டின் பிரதமர் பேராசையில் தமிழ்நாட்டில் ஏதாவது சாதித்து விட லாம், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விட லாம் என நினைக்கின்றார். ஆனால்  தமிழக மக்கள் இவரது உண்மை முகம் தெரிந்தவர்கள், ஆதரிக்க மாட்டார்கள். ஒரு போதும் தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை. பிரதமர் நிலைமை பரிதாபமாக உள்ளது. அடுத்தது உள் ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்போது பிரதமர் தெருத் தெருவாக வாக்கு சேகரிக்க போகின்றார்.  இந்தியாவிலேயே பெரிய ஊழல் தேர்தல் பத்திரம் குறித்தோ, ரூ.7.5 லட் சம் கோடி ஊழல்  போன்றவை குறித்தோ பிரதமர் ஏன்? பேச மறுக்கின்றார். ஒரு விரல் பிறரை நோக்கி நீட்டினால், 4 விரல் அவரை நோக்கி இருக்கும் என்பதை மறந்து விடுகின்றார். தேர்தல் நன் கொடை குறித்து சென்னை, கோவை யில் பிரதமர் பேச வேண்டும். காவிரி விவகாரத்தில் பா.ஜ.கவுடன் இருந்த  போது அதிமுக என்ன செய்தது. நாடா ளுமன்றத்தை முடக்கியதாக சொல்வது வேறு விவகாரங்களுக்காக சிஏஏ,  என்ஆர்சி, வேளாண் சட்டம் ஆகிய வற்றை பாஸ் பண்ண வேண்டும் என்ப தற்காக நாடாளுமன்றத்தில் உறுது ணையாக அதிமுகவினர் இருந்தனர் என குற்றம்சாட்டினார்.

பாஜக துண்டறிக்கைகள் பறிமுதல்

தேர்தல் அதிகாரிகளின் அனுமதி இன்றி பாஜக கட்சி பெயருடன் அச்சிடப் பட்ட துண்டறிக்கைகளை வாகன சோத னையின் போது தேர்தல் பறக்கும் படை யினர் பறிமுதல் செய்தனர். உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை குழுவினர் லவ்டேல் பகுதி யில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது அவ்வழியாக வந்த காரை  சோதனை செய்தனர். காரில் தேர்தல் அதி காரிகளின் அனுமதி இன்றி பாஜக கட்சி  பெயருடன் அச்சிடப்பட்ட துண்டறிக்கை கள் இருந்தது. இதனை பறக்கும் படை யினர் பறிமுதல் செய்தனர். மேலும், தேர் தல் நடத்தை விதிமுறை களை மீறியதாக லவ்டேல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்பு காவல் துறை விசார ணையில் காரில் வந்தவர் உதகை பெங் கால்மட்டம் பகுதியை சேர்ந்த பாஜக பிரமு கர் வினோத்(47) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடு விக்கப்பட்டார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த தில் இருந்து தொடர்ந்து பாஜக வேட்பா ளர்கள் நடத்தை விதிகளை மீறிய வண் ணமே உள்ளனர். குறிப்பாக நீலகிரி தொகு தியில் போட்டியிடும் எல்.முருகன், கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணா மலை, திருப்பூர் தொகுதியில் போட்டியி டும் முருகானந்தம் உள்ளிட்ட வேட்பாளர் கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவ தும், தேர்தல் அதிகாரிகளை மிரட்டும் போக்கும் தொடர்ந்து கொண்டே உள்ளது. தேர்தல் ஆணையம் இவர்கள் மீது கறா ரான நடவடிக்கையை எடுக்காத பட்சத்தில் இந்நிலை தொடரவே செய்யும் என்றே அரசியல் விமர்சர்கள் தெரிவிக்கின்றனர்.

‘தாமரையை வீழ்த்துவோம்’ என டிடிவி உளறல்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உளரல் பேச்சு, தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரு கிறது. கோவை மாவட்டம், சூலூரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதர வாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திங்களன்று பிரச்சாரம் மேற் கொண்டார். அப்பொழுது பாஜக வேட்பா ளர் அண்ணாமலைக்கு “குக்கர் சின்னத் தில்” வாக்களிக்க வேண்டும் என்றார். கூடியிருந்தவர்கள் குபீர் என சிரிக்கவே, தவறை புரிந்து சுதாரித்து கொண்ட டிடிவி நேற்று முழுவதும் தேனியில் பிரச்சாரத் தில் இருந்ததால் அதே ஞாபகத்தில் பேசி விட்டேன். எப்பொழுதும் மிஸ் ஆகாது, இப் போது மிஸ் அகிவிட்டது. சரி “கூட்டணிக் கட்சிகள் தானே அதில் ஒன்றும் தவறு இல்லை” என்று சொல்லி சமாளித்தார். பின்னர், உரையை நிறைவு செய்யும் பொழுது, மோடி அவர்களின் நம்பிக் கைக்கு உரிய அண்ணாமலையை வெற்றி  செய்வதன் மூலம், ஒரே கல்லில் இரண்டு  மாங்காய் என்பதைப் போல தாமரையை  வீழ்த்த நீங்கள் துணை புரிய வேண்டும்  என்றார். இதனை கேட்ட பாஜகவினருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தேனியில் இருந்து இவரை வரவழைத்து சொந்த காசில் சூனி யம் வைத்துக்கொண்டோம் என புலம்பிய படியே டிடிவியை அனுப்பி வைத்தனர்.