ஈரோடு,ஜன.17- காளிங்கராயன் அணைகட்டில் காணும் பொங்கல் கொண்டாட வந்த பொதுமக்கள் அணைக்கட்டு பகுதிக்கு அனுமதிக்காததால் ஏமாற்றமடைந் தனர். பவானி அருகில் உள்ள காளிங்கரா யன்பாளையத்தில் பவானி ஆற்றின் குறுக்கே காளிங்கராயன் அணை உள் ளது. இந்த அணை கட்டில் இருந்து பவானி ஆற்றின் இருந்து வெளியே றும் உபரிநீர் காலிங்கராயன் வாய்க் கால் வழியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாய நிலத்திற்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த அணைக்கட்டு பகுதியில் தைத்திருநாள் முடிந்த பிறகு காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடு வது வழக்கம். இந்நாளில், பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் அணைக் கட்டு பகுதிக்கு வந்து காலை முதல் மாலை வரை தங்கி உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில், அணைக்கட்டு பகுதி யில் அவிநாசி அத்திக்கடவு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகி றது. இதனையடுத்து, பாதுகாப்பு நல னுக்காக பொதுமக்கள் யாரும் அணைக்கட்டு பகுதிக்குள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டாவது அனு மதி கிடைக்கும் என காத்திருந்த பொது மக்களுக்கு இந்த ஆண்டும், காலிங் கராயன் அணைக்கட்டு பகுதியில் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட் டுள்ளது. இது இப்பகுதி மக்களி டையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. இருப்பினும், திட்டப்பணி கள் நடைபெறுவதாலும், அணையின் பாதுகாப்பு கருதியே அனுமதிக் கவில்லை என்பதை உணர்ந்து திரும் பிச்சென்றனர்.