மே.பாளையம், ஜன.6- மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மோத்தேபாளையத்தில் முதலையை பிடிக்க குட்டை தூர்வாரபட்ட நிலை யில், முதலை இல்லாததால் மிஞ்சிய சேற்று நீரில் துள்ளிக்குதித்த மீன்களை உள்ளூர் மக்கள் போட்டி போட்டு அள்ளிச்சென்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம் நகர பகுதியை ஒட்டியுள்ளது மோத் தேபாளையம் கிராமம். இங்கு, மழை நீரினை தேக்கி வைக்கும் வகையில் தடுப்பனையுடன் கூடிய குட்டை ஒன்று உள்ளது. இந்த குட்டையில் அண்மையில் பெய்த பருவமழை காரணமாக தண் ணீர் முழுவதும் நிரம்பியதுடன் அதில் மீன்களும் அதிக அளவில் இருந்தது. இதனை பிடிக்க உள்ளூர் இளைஞர் கள் சிலர் முயன்ற போது அந்த குட்டை யில் முதலை இருப்பது தெரிய வந்தது. முதலையை தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வளைத லங்களில் வெளியிட்ட உள்ளூர் மக்கள், இதனை பிடிக்க சிறுமுகை வனத்து றையிடம் கோரிக்கையும் வைத்தனர். இதனையடுத்து சிறுமுகை வனத் துறையினர் அந்த முதலையை பிடிக்க குட்டையை சுற்றி வளையை கட்டி குட்டையில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடு பட்டனர். குட்டையில் இருந்த நீர் முழு வதும் வெளியேற்றப்பட்ட நிலையில், அதில் முதலை இல்லாதது வனத்துறை யினருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி யது. குட்டையில் தேங்கியிருந்த சுமார் 8 அடி தண்ணீர் வீணான நிலையில், மீதமிருந்த சேற்று நீரில் ஏராளமான மீன்கள் துள்ளிக்குதித்தன. அதனை கண்ட உள்ளூர் மக்கள் உற்சாகமாகி, குட்டையில் இறங்கி ஆர்வமுடன் மீன்கள் பிடித்துச் சென்றனர். இருப்பினும் இறுதிவரை அந்த குட் டையில் இருந்த முதலை எங்கு சென் றது?அருகிலேயே எங்காவது பதுங் கியுள்ளதா? என அறியாமல் வனத் துறையினர் தொடர்ந்து அப்பகுதி யில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர்.