ஈரோடு, மார்ச் 3- சத்தியமங்கலம் அருகே சுமார் 40 ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள் தங்கள் இடத்தை பதிவு செய்ய முடியாமல் அலை கழிப்புக்கு ஆளாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்திற்குட்பட்டது அங்கணகவுண் டன்புதூர். இப்பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் இடத்தை பத்திரப்பதிவு மற்றும் பெயர் மாறுதல் போன்றவற்றிற்கு உரிய அலுவலகத்திற்குச் செல்லும் போது அந்த பூமி வக்பு வாரியத்திற்குச் சொந்தமானது என்று கூறி பதிவு செய்யப்படுவதில்லை. இந்நிலையில், மேற்படி இடத்தை பதிவு செய்வதற்கு தடையின்மை சான்று கோரப் பட்டது. இதுகுறித்து விசாரணை நடை பெற்ற நிலையில் சான்று பெறமுடிய வில்லை. எனவே, மீண்டும் வட்டாட்சியர் உள் ளிட்ட அலுவலர்களிடம் வெள்ளியன்று அப் பகுதி மக்கள் முறையிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.ஆர்.திருத்தணிகாசலம், தாலுகா செய லாளர் கே.எம்.விஜயகுமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுடன் சென்று மீண்டும் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.