இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர், வெள்ளகோவில், நடேசன் நகர் கிளை சார்பில் செவ்வாயன்று மக்கள் ஒற்றுமை பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் டி.ரவீந்திரன், வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் செ.மணிகண்டன், வெள்ளகோவில் நகராட்சி வார்டு கவுன்சிலர் ராதாமணி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.