ஆட்டுக்கல் பக்கம் திரும்பும் மக்கள்!
தருமபுரி, ஜன.6- இயந்திரங்களை பயன்படுத்தி வந்த மக்கள் தற்போது உரல், ஆட்டுக்கல் பக்கம் திரும்பியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் இருந்து சரக்கு வாகனத்தில் உரல், அம்மிக்கல் மற்றும் ஆட்டுக்கல் ஆகிய வற்றை கொண்டு வந்து, அரூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகு திகளில் தெரு தெருவாக சென்று விற்பனை செய்து வரு கின்றனர். கிரைண்டர், மிக்சி பயன்பாட்டில் உள்ளதால், உரல், ஆட்டுக்கல்லை யாரும் பயன்படுத்துவது இல்லை. தற்போது மக்களிடையே பாரம்பரிய உணவு பழக்கம் அதிகரித்து உள்ள தால், இந்த ஆட்டுக்கல், அம்மி ஆகியவற்றை வாங்குவதும் அதிகரித்துள்ளது. சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்து வம் அளிப்பது போல் உரல், அம்மி பயன்படுத்த மக்கள் விரும்புகின்றனர். மேலும், வீடுகளில் உரல், அம்மிக்கல் வைத்திருப்பது நல்லது என மக்கள் நினைப்பதால், விற்பனை அதிகரித்துள்ளது. ஆட்டுக்கல், உரல் ஆகியவை மரம் மற்றும் ஸ்டீல் கைப்பிடி பொருத்தப்பட்டுள்ளது. கல்லின் அளவை பொருத்து உரல் ரூ.1000 முதல் ரூ.3 ஆயிரம் வரையும், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் உடைக்க பயன்படுத்தும் சிறிய உரல் ரூ.250 முதல் ரூ.550 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சிஎன்சி இயந்திரம் இயக்குவது குறித்த பயிற்சி
சேலம், ஜன.6- சேலம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடைகல் (சிஎன்சி) இயந்திரம் இயக்கும் பயிற்சி வழங்கப்படவுள்ளதென தெரி விக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது, ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படை யில் 10 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு கடைகல் இயந்திரம் இயக்கும் பயிற்சி (CNC Operator-Turning Vertica Centre) என்டிடிஎப் நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்த வர்களாக இருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு முடித்த 18 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப் பயிற்சிக்கான கால அளவு 6 மாதம் 15 நாட் கள் ஆகும். மேலும் தங்கி படிக்கும் வசதி யும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக் கும் மாணாக்கர்களுக்கு தேசிய திறன் மேம் பாட்டு நிறுவனத்தால் (SSC and NSDC Approval Certificate) அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி யினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெற லாம். மேலும், புகழ் பெற்ற தனியார் தொழிற் சாலைகளில் வேலை வாய்ப்பு பெற நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். இப்பயிற்சி யினை பெற www.tahdco.com என்ற இணை யதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட மேலா ளர் அலுவலகம், தாட்கோ, சீலநாயக்கன் பட்டி, சேலம் அலுவலகத்தை அணுகிப் பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரேற்றம் செய்ய அனுமதி கேட்டு ஆட்சியரிடம் மனு
தருமபுரி, ஜன.6- விவசாய பாசனத்திற்கு நீரேற்றம் செய்ய அனுமதி கோரி விவசாயிகள் தருமபுரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றி யம், இருமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வையம் பட்டி ஏரி, வாளாப்பட்டி ஏரி, பாப்பாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சாமாண்டபட்டி, மேல் சாமாண்டபட்டி, வாடமங்கலம், புது காலனி, குள்ளன் கொட்டாய், சானங்கொள்ளை, பனங் காட்டு கொள்ளை, மோட்டுகொள்ளை ஆகிய பகுதிகளின் நடுவில் சாமாண்டபட்டி ஏரி உள் ளது. அவற்றை சுற்றி, 2 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களுக்கு பாசன வசதி பெற தென் பெண்ணை ஆற்றங்கரையில் இருந்து விவ சாய பாசனத்திற்காக நீரேற்றம் செய்ய அனு மதி அளிக்க வேண்டும் எனக்கோரி அப்பகுதி விவசாயிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மனு அளித்தனர்.
போலீசார் மீது சாணத்தை ஊற்றிய தாய், மகள் கைது
தருமபுரி, ஜன.6- நல்லம்பள்ளி அருகே நிலம் அள வீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து, போலீ சார் மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றி தாய், மகளை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள தண்டுக்காரம்பட்டியில் சாலம்மாள் (50) என்பவர் வசித்து வரு கிறார். இவருக்கு அதேபகுதியில் சொந் தமாக 85 சென்ட் விவசாய நிலம் உள் ளது. இந்த நிலத்தால் அதன் அருகில் உள்ள சாலம்மாளின் சகோதரியான முனியம்மாள் (60) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட் டது. இதில், சாலம்மாள் தன்னுடைய நிலத்தை நில அளவயர் மூலம் முழு மையாக அளவீடு செய்ய முடிவு செய் தார். அதன்படி நிலத்தை அளவீடு செய்ய வட்டாட்சியரிடம் மனு அளித்து, தொப்பூர் போலீசார் பாதுகாப்புடன் பாகலஅள்ளி கிராம நிர்வாக அலுவ லர் மாதேஷ், நில அளவையர் ஜோதி உள் ளிட்டோர் தண்டு காரம்பட்டி ஏரி அருகே உள்ள நிலத்தை அளவீடு செய்ய சென்றனர். இந்நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற் றும் அவரது மகள் மாதம்மாள் (40) எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் கோபம டைந்து அதிகாரிகளிடம் முனியம்மா ளும், மாதம்மாளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, நில உரிமை யாளர் சாலம்மாள் அவருடன் வந்த உற வினர் மற்றும் தொப்பூர் சிறப்பு காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோர் மீது முனியம்மாள் அவரது மகள் மாதம் மாள் கரைத்து வைத்திருந்த மாட்டு சாணத்தை ஊற்றினர். இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம் பவத்தால், அதிர்ச்சியடைந்த நில அள வீடு செய்யவந்த நில அளவையர் ஜோதி, தொப்பூர் காவல் நிலையத்தில் புகார ளித்தனர். அதன்பேரில் போலீசார் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 2 பிரிவின் கீழ் வழக் குப்பதிவு செய்து முனியம்மாள், அவ ரது மகள் மாதம்மாள் ஆகிய 2 பேரை யும் கைது செய்தனர். கைதான 2 பேரை யும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீசாரின் துணையோடு விளை நிலம் ஆக்கிரமிப்பு?
சேலம், ஜன.6- எடப்பாடி அருகே விளை நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட சம்பவத்திற்கு துணை போகும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள எருமைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். இவரது வீட்டின் பின்புறம் குடியிருக்கும் லோகநாதன் என்பவர், தனக்கு கிழக்கு பக்கமாக தடம் வேண்டும் என்று எடப்பாடி வட்டாட்சியரிடம் மனு அளித்தார். வட்டாட்சியர் விசாரணையில், பட்டா நிலத்தில் இருந்து தடம் விட முடியாது என தெரிவிக்கப்பட்டது. மேலும், இப்பிரச்சனையை நீதிமன்றத்தில் அணுகி முடித்துக் கொள்ளுங்கள் என வட்டாட்சியர் தெரிவித்திருந்தார். இதனிடையே ஊர் கட்டப்பஞ்சாயத்து என்று கூறி அழைத்து, பஞ்சாயத்து முடிவு என்று சொல்லி 20க்கும் மேற்பட்ட அடியாட்களை வைத்து, கொங்கணாபுரம் காவல்துறை உதவியோடு, விவசாய நிலத்தில் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு பயிர்களை அழித்து அராஜகமாக தடம் போட்டுள்ளனர். அப்போது சம்பவ இடத்தில் கொங்கணாபுரம் காவல் உதவி ஆய்வாளர்கள் இருந்துள்ளனர். இப்பிரச்சனை சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் அலுவலரிடம் புகார் அளித்து மீண்டும், கொங்கணாபுரம் காவல் நிலையத்திற்கு விசாரணை வந்தது. இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையே உள்ளது. எனவே, கொங்கணாபுரம் காவல் துறையினரின் அத்துமீறலைக் கண்டித்து பிரகாஷ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் மனு அளித்தார்.
காவலர்களுக்கு துப்பாக்கி சுடுதல் நினைவூட்டல் பயிற்சி
தருமபுரி, ஜன.6- தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்களுக்கு ஒடசல்பட்டி வனப் பகுதியில் துப்பாக்கி சுடுதல் நினை வூட்டல் பயிற்சி நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பென்னாகரம், பாலக் கோடு, அரூர், பாப்பிரெட்டிபட்டி காவல் உட்கோட்டங்களில் உள்ள பகுதிகளில் காவல் துறையில் பணி யாற்றும் காவல் துணை கண்காணிப் பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய் வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்ற னர். மாவட்டத்தில் பணியாற்றும் காவ லர்கள் ஆண்டுக்கு ஒருமுறை துப் பாக்கி சுடும் நினைவூட்டல் பயிற்சி காவல் துறை சார்பில் நடத்தபட்டு வருகிறது. அதனடிப்படையில் மாவட் டத்தில் பணியாற்றும் காவலர்களுக் கான துப்பாக்கி சூடும் நினைவூட்டல் பயிற்சி சனியன்று தருமபுரி அடுத்த ஒடசல்பட்டி அருகே உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் ஆயுதப் படை காவல் ஆய்வாளர் செல்வமணி மேற்பார்வையில் நடைபெற்று வரு கிறது. இதில் தினந்தோறும் 100 முதல் 150 காவலர்களுக்கு, காவல் உதவி ஆய்வாளர் சின்னசாமி துப்பாக்கி சுடும் நினைவூட்டல் பயிற்சியை வழங்கி வருகிறார். இந்த பயிற்சியில் துப்பாக்கியை பிடிக்கின்ற விதம், சுடுவதற்கு தயாராவது, எவ்வாறு துப் பாக்கியை கையாள வேண்டும் என் பது குறித்த பயிற்சியை உதவி ஆய் வாளர் சின்னசாமி வழங்கி வருகி றார். அதேபோல் எந்த வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகி றது உள்ளிட்ட விவரங்களும் காவ லர்களுக்கு நினைவூட்டல் செய்யப் பட்டு வருகிறது. ஒவ்வொரு காவ லர்களுக்கும் 3 சுற்றுகள் என 15 குண்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு 9 எம்எம் பிஸ்டல், காவலர்களுக்கு 303, 7.62 எம்எம் போர்டு ஆக்சன், இன் சாஸ் என மூன்று ரக துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்படுகிறது. தொடர்ந்து இந்த நினைவூட்டல் பயிற்சி 10 நாட்கள் நடைபெற உள் ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் விபத்துகள் ஏற்படும் சாலை: சரி செய்ய கோரி சாலை மறியல்
உடுமலை, ஜன.6- தேசிய நெடுச்சாலைக்கு செல்லும் இணைப்பு சாலையில் தொடர் விபத்துகள் ஏற்படுவதை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வெள்ளியன்று சாலை மறியல் போராட்டம் நடத் தினர். பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுச்சாலையானது உடுமலை நகர்ப்பகுதியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த சாலையை இணைக்கும் வகை யிலும், உடுமலை நகரத்திற்குள் வாகனங்கள் வராமல் பழனி மற்றும் பொள்ளாச்சி செல்லும் வகையில் பாலம்பட்டியில் தொடங்கி ராகல்பாவி பிரிவு வரை பைபாஸ் சாலையாக செயல்படும் வகையில் போடப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்னும் முழுமை பெறாத இந்த சாலை யில் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வந்த நிலையில், மீண்டும் வெள்ளிக்கிழமை பாலப்பட்டி அருகே உள்ள இணைப்பு சாலையில் விபத்து ஏற்பட்டு உள்ளது. முழுமை பெறாத இணைப்பு சாலையில் முறையான எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். இப்பகுதியில், போக்குவரத்து காவல் துறை மையம் அமைக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட் டம் நடைபெற்றது.
திருப்பூர் கொலை: குற்றவாளிகள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண்
திருப்பூர், ஜன. 6 - திருப்பூரில் கோரமான முறையில் இளைஞர் வெட்டிப் படு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். திருப்பூர் வெள்ளியங்காடு, திரு.வி. க. நகர், நாவிதன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (42) கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பாலமுருகனை இரு சக்கர வாகனத் தில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் தலையில் சரமாரியாக வெட்டி முகத்தை முழுவதுமாக சிதைத்து விட்டுத் தப்பி சென் றது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படை கள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பாலமுருகனை குற்றவாளிகள் கோரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனிடையே கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வெள்ளி யன்று இரவு சரணடைந்தனர். சென்னை ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த முருகன் என்கிற நொண்டி முருகன் (56), அவரது மகன் மணி என்ற மணிகண்டன் (23), திருப்பூர் தட்டான் தோட்டத்தைச் சேர்ந்த சரவணன் (26), கதிர்வேல் (21), மதுரை நாகமலை கோழிப்பண்ணை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (25) ஆகிய ஐந்து பேரும் செங்கல்பட்டு குற்றவியல் நீதி மன்றத்தில் நீதிபதி ரீனா முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களை செங்கல்பட்டு சிறையில் 15 நாள் நீதிமன்றக் காவ லில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். முன்விரோதம் காரண மாக இந்த கொலை நடைபெற்றதாக காவல் துறையினர் தெரி வித்தனர்.
குற்றவியல் சட்டத் திருத்தத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு
திருப்பூர், ஜன. 6 - மத்திய அரசு மூன்று முக்கியமான குற்றவியல் சட்டத் திருத்தம் செய்ததைக் கண்டித்து திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் புறக்கணிப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். குற்றவியல் சட்டத்தின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருக் கும் நிலையில் இந்தியில் புரியாதபடி பெயர் மாற்றம் செய்தி ருப்பது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அத்து டன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களை ஜனநாயக விரோதமான முறையில் வெளியேற்றி விட்டு எவ்வித விவாத மும் இல்லாமல் இந்த மூன்று சட்டத் திருத்தங்கள் செய்யப்பட் டுள்ளன. இந்த குற்றவியல் திருத்தச் சட்டத்தை பல்வேறு குற்ற வழக்குகளுக்கு ஏற்கெனவே உள்ள தண்டனையை மாற்றி கடுமையான அதிகபட்ச தண்டனை நிர்ணயிக்கப்பட் டுள்ளது, சாமானிய அப்பாவி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்து வதாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதி யாக திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அனைத்து வழக்கறிஞர் சங்கங்களைச் சேர்ந்த வழக்கறிஞர் களும் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள தாராபுரம், உடுமலைப்பேட்டை, அவிநாசி, ஊத்துக்குளி, காங்கேயம், மடத்துக்கு ளம் உள்ளிட்ட நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் புறக் கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இப்புறக் கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக மூத்த வழக்கறிஞர் கள் தெரிவித்தனர்.
கார் வியாபாரிகள் சங்கம்: வெள்ள நிவாரண நிதி வழங்கல்
திருப்பூர், ஜன. 6 - தென் மாவட்டங்களில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்பூர் மாவட்ட கார் வியாபாரிகள் சங்கம் ரூ.83 ஆயிரம் நிதி வழங்கி உள்ளது. தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல கூட்ட மைப்பின் முடிவுப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரண பொருட்கள் வாங்கிக் கொடுப்பது என தீர்மா னித்துள்ளனர். இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட கார் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.விஸ்வநாதன் தலைமை யில் ரூ.83 ஆயிரத்தை வசூல் செய்து கொடுத்தனர்.
தொழிலாளியை கடத்தி சரமாரி தாக்குதல்: இருவர் கைது
கோபி, ஜன.6- கோபி அருகே தொழிலாளியை கடத்தி சென்று சராமாரி யாக தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள குருமந் தூர் பகுதியைச் சேர்ந்தவர் பட்டப்பன். இவர் மொடச்சூர் பகு தியை சேர்ந்த தனபால் என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பட்டப்பன் ஊதியம் குறைவாக இருப்பதால் தனக்கு ஊதி யம் போதவில்லை என்பதால் பணிக்கு வரவில்லை என தன பாலிடம் தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தனபால் நிறுவனத்தில் பணி புரியும் நண்பர்கள் பூபதி, சதீஷ் ஆகியோர் உதவியுடன், பட் டப்பணை காரில் கடத்தி சென்று கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பட்டப்பன் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நம்பியூர் காவல்துறையினர் தனபால் மற்றும் பூபதி ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
ரேசன் அரிசி கடத்தியவர் கைது
ஈரோடு, ஜன.6- ஈரோடு, ஆசனூர் காவல் எல்லைக்குட்பட்ட காரப்பள் ளம் பகுதியில் ரேசன் அரிசி கடத்திச் செல்வதாக குடிமை பொருள் குற்றப்புலனாய் வுத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய் வாளர் பன்னீர்செல்வன் தலைமையில் காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடு பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை யிட்டதில், 12 மூட்டைகளில் 600 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதனைத்தொ டர்ந்து, சரக்குவேனை கைப் பற்றிய போலீசார், ஓட்டுநர் சிவக்குமாரை பிடித்து விசா ரணை செய்தனர். விசார ணையில், பொதுமக்களிட மிருந்து ரேசன் அரிசியை வாங்கி, கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் காய்கறி மார்க்கெட்டில் வேலை செய் யும் தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக, கடத்திச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார் சிவக்குமாரை கைது செய்த னர்.
அண்ணாமலையை வரவேற்று பேனர் வைத்தவர் மீது வழக்கு
சேலம், ஜன.6- சேலம் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை, “என் மண் என் மக்கள்” யாத்திரையை கடந்த 3 நாட்க ளாக நடத்தினார். இதனால் அவரை வரவேற்று பல இடங்க ளில் கட்சி நிர்வாகிகள் பேனர்களை வைத்துள்ளனர். இதில், சேலம் மாநகரம், அன்னதானப்பட்டி 4 ரோடு சந்திப்பு பகுதி யில் உரிய அனுமதி ஏதும் இன்றி, பாஜக தலைவர் அண்ணாம லையை வரவேற்று பேனர் வைக்கப்பட்டது. இதனை ரோந்து பணியிலிருந்த அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் வெற் றிச்செல்வன் பார்த்துள்ளார். இதையடுத்து அந்த பேனரை வைத்த மணியனூர் பொடாரன்காடு சக்திநகரைச் சேர்ந்த பாஜ பிரமுகர் தியாகராஜன் (49) மீது உரிய அனுமதியின்றி பேனர் வைத்ததாக வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்
ஈரோடு, ஜன.6- ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வெள்ளியன்று இரவு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, சக மாண வர்கள் அவரை கல்லூரியில் உள்ள ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அழைத்து சென்றனர். தொடர்ந்து, மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, மாணவன் ஆம்புலன் சில் ஏற முயன்றுள்ளார். அப்போது ஆம்புலன்சில் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. இதை கண்ட மாணவர், ஆம்பு லன்ஸ் ஓட்டுநர் மற்றும் மாணவருடன் வந்தவர் வேகமாக கீழே இறங்கி ஓடினர். பின்னர் சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் தீ பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 20 நிமிடம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருக் கைகள் எரிந்து நாசமானது. நல்ல வேலையாக தீ விபத்து நடப் பதற்கு முன்பாக ஆம்புலன்சில் இருந்தவர்கள் இறங்கி விட்ட தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது என முதற்கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது.
ஏற்காட்டில் காப்பி விலை உயர்வு
சேலம், ஜன.6- மகசூல் குறைந்ததால், ஏற்காட்டில் விளையும் காப்பி விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், ஏற்காட்டின் முக்கிய விவசாயமாக காப்பி உள்ளது. ஏற்காட்டில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் காப்பி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் காப்பிக்கு தனி மதிப்பு உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை விளையும் காப்பி சரி யான நேரத்தில் மழை பெய்தால் மகசூல் அதிகரிக்கும். இந் தாண்டு, கடந்த மூன்று ஆண்டுகளை காட்டிலும் மகசூல் குறைவாக வந்துள்ளதாக உள்ளூர் விவசாயிகள் தெரிவித்த னர். பருவம் தவறி பெய்த மழையால் காப்பி மகசூல் குறைந் துள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளது. இங்கு விளையும் காப்பி 80 சதவிகிதம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக் கது.
நகை பறிப்பு: 3 ஆண்டு சிறை
சேலம், ஜன.6- சேலம் மாவட்டம், ஆத் தூர் அருகே உள்ள விநாயக புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. இவர் வடக்கு உடை யார்பாளையம் பகுதியில் துணி தைக்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு செப்.29 ஆம் தேதி யன்று இரவு ஜீவா, துணி தைக்கும் பணியில் ஈடுபட்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ஆத்தூர் அருகே உள்ள ஜோதி நகர், ராஜ செட்டி தெருவைச் சேர்ந்த மேகராஜ் (எ) மனோஜ்குமார் (27), ஜீவாவின் கண்ணில் மிளகாய் பொடி தூவி, மூன் றரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக் சென்றார். இதைய டுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத் தில் நடைபெற்று வந்த நிலை யில், சாட்சி ஆதாரங்களைக் கொண்டு குற்றம் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டார்.
வெங்காயம் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
கோவை, ஜன.6- வெங்காயத்தின் வரத்து அதிகரிப்பு கார ணமாக, விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை மாவட்டங் களில் சின்ன வெங்காயம் அதிகளவில் பயிரி டப்படுகிறது. கோவை மாவட்டத்தில் தொண் டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. கோவை யில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளுக்கு உள்ளூர் வரத்துடன், மைசூர் உள்ளிட்ட கர்நா டக மாநில பகுதிகளில் இருந்தும் வரத்து இருக்கும். கோவைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 400 டன் பெரிய வெங்காயமும், சுமார் 100 டன் சின்ன வெங்காயமும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தபோது, அதனுடன் சேர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.200 வரை விற்பனையானது. கடந்த டிசம்பர் முதல் வாரம் வரையிலும் கூட கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை யில் கடந்த சில நாட்களாக தொடர் சரிவு ஏற் பட்டுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங் காயம், தற்போது ரூ.35-க்கு விற்பனை செய் யப்படுகிறது. ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை யில் சின்னவெங்காயத்தின் விலை ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.35-க்கும், அதிகபட்சம் ரூ. 38-க்கும் விற்பனையானது. அதேபோல் சரிவை சந்தித்து வரும் பெரிய வெங்காயமும் குறைந்தபட்சம் ரூ.25-க்கும், அதிகபட்சம் ரூ. 29-க்கும் விற்பனையானது. கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையா னது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வரத்து அதிகரித்து இருப்பதால் வெங்கா யத்தின் விலையில் சரிவு ஏற்பட்டு வருவ தாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ள னர். சின்ன வெங்காயத்தின் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உதகையில் அறிவியல் கருத்தரங்கம்
உதகை, ஜன.6- உதகை பிரிக்ஸ் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடை பெற்ற, அறிவியல் கருத்தரங்கில் ஏராமா னோர் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டம், உதகை பிரிக்ஸ் மேல் நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், அறிவியல் கருத்த ரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சரவணசுந்தர் தலைமை வகித்தார். அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே.ஜே.ராஜூ சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு பேசுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் சமுதாயத்திற்கு நன்மையா? அல்லது தீமையா? இந்த தொழில் நுட்பத்தால் பெரும் பான்மையான மக்களுக்கு வேலை வாய்ப்பு இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. ஆனால், சில விஞ்ஞானிகள் இக்கருத்து தவ றானது என கூறுகின்றனர். இதுவரையில் மனித சமுதாயம் காணாத வகையில் புதிய தொழில் நுட்பங்களும், வேலை வாய்ப்பு களும் உருவாகும் என கூறுகின்றனர். கணினி வந்த பின்னர் ஏராளமான புதிய வேலை வாய்ப்புகள் உருவானது குறிப்பிடத்தக்கது. ஸ்டீபன் ஹாக்கிங் என்ற உலக புகழ்பெற்ற விஞ்ஞானி தன்னுடைய கண் தசைகளை அசைப்பதன் மூலம் கணினியை இயக்கி யதும், மேலும் ஒருவர் எந்த மொழியில் பேசி னாலும் கேட்பவருடைய தாய் மொழியில் உட னுக்குடன் மொழி பெயர்த்து கொடுக்கும் அள விற்கு தொழில்நுட்பம் உயர்ந்துள்ளது. விவ சாயம் போன்ற பல துறைகளிலும் இந்த நவீன தொழில் நுட்பம் பல அதிசயங்களை நிகழ்த் தும். வீட்டு வேலை, வாகனம் இயக்குதல் போன்ற பல வேலைகளை ரோபோக்களே செய்கிறது., என்றார்.
கல்லூரி பேருந்து மோதி மாணவி பலி
கோபி, ஜன.6- கோபிசெட்டிபாளையம் அருகே வெள் ளாளபாளையம் பிரிவில் இருசக்கர வாக னம் மீது கல்லூரி பேருந்து மோதிய விபத் தில் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள ஒத்தக்குதிரையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியல் கல்லூரி செயல் பட்டு வருகிறது. இக்கல்லூரியில் கோபி ஈஸ்வரன் கோவில் வீதியைச் சேர்ந்த சுப்பிர மணியம் என்பவரின் மகள் சுவர்ணா ஸ்ரீ, இரண் டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலை யில் கல்லூரி மாணவி சுவர்ணா வெள்ளி யன்று காலை வழக்கம் போல், தனது எலக்ட் ரிக் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கோபி யிலிருந்து மாணவர்களை ஏற்றி கொண்டு, மாணவி பயிலும் அதே கல்லூரி பேருந்து கல் லூரியை நோக்கி சென்றதாக தெரிகிறது. அப்போது, பேருந்தானது வெள்ளாளபாளை யம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு வாகனத்தை முந்தும் முயற் சியில் கல்லூரி மாணவியின் மீது மோதியுள் ளது. இதில், கிழே விழுந்த மாணவி, தலை யில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார் இதுகுறித்து தகவலறிந்து வந்த கோபி செட்டிபாளையம் போலீசார், சாலை விபத் தில் உயிரிழந்த கல்லூரி மாணவியின் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.