சேலம், மார்ச் 25- சேலம் அரியாகவுண்டம்பட்டி அருகே குப்பை தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் மாநக ராட்சி வாகனத்தை சிறைபிடித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் அரியாகவுண்டம்பட்டி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடத்தில் வெள்ளி பூங்கா அமைப்பது என அரசு தரப் பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே மாநகராட்சி அதிகாரிகள், அந்த இடத்தில் குப்பை அரைக்கும் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்து வாகனங்களைக் கொண்டு வந்து, நிலத்தை சுத்தப்படுத்த முயன்றனர். இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள், மாநகராட்சியின் இரண்டு வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அதிகாரிகள் அங்கிருந்து வெளி யேறினர். மேலும், இந்த காலியிடத்தில் வெள்ளி பூங்கா அமைப்பது என மாவட்ட நிர்வா கம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் சில மாநகராட்சி அதிகாரிகள், இந்த பகுதி யில் குப்பை அரைக்கும் தொழிற்சாலையை அமைக்க முயற்சி செய்து வருகின்றனர். இதனை கைவிட வேண்டும். இல்லையென் றால் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.