districts

img

சிவன்மலை அருகே டாஸ்மாக் கடை: மக்கள் எதிர்ப்பு

திருப்பூர், ஆக. 28 – திருப்பூர் காங்கேயம் வட்டம் சிவன்மலை  ஊராட்சிக்கு உட்பட்ட அன்னை சந்தியா நக ரில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைப்ப தற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர். திங்களன்று இந்த வட்டாரத்தைச் சேர்ந்த  மக்கள் 50க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து  ஆட்சியரிடம் மதுபானக் கடை அமைப்ப தற்கு எதிர்ப்புத் தெரிவித்து மனு அளித்த னர். இதுதொடர்பாக மக்கள் கூறியதாவது: சிவன்மலை ஊராட்சிக்கு உட்பட்ட அன்னை  சந்தியா நகரில் புல எண் 1560 /2 சியில்  உள்ள கட்டிடத்தில் மதுபானக் கடை அமைக்கப்படுகிறது. இப்பகுதியில் பள்ளக் காட்டுப்புதூர், கொல்லம்பாளிக்காடு உள் ளிட்ட மக்கள் நெருக்கமாக வசிக்கும் குடியி ருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இந்த கடை வரு கிறது. இந்த கடை அமைய இருக்கும் இடத் தைச் சுற்றிலும் அரிசி ஆலைகள், பனியன் கம் பெனிகள், கருப்பராயன் கோயில், எல்லை பிள்ளையார் கோயில் மற்றும் ஏராளமான குடி யிருப்புகள் உள்ளன. அத்துடன் மூன்று நல்ல  தண்ணீர் அடிகுழாய் இருப்பதால் பெண்கள்  அதிகளவில் இந்த வழியில் வந்து செல்வர்.  இப்பகுதியில் பஸ் வசதி இல்லாததால் பெண் கள், பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் சைக் கிள்களிலும், நடந்தும் சென்று வருகின்ற னர். இப்பகுதியில் மதுபானக் கடை அமையும் பட்சத்தில் பள்ளி செல்லும் சிறார்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை  ஏற்படும். இதுதவிர பிஏபி வெள்ளகோவில் மெயின் கால்வாய் புல எண் 1559இல் செல்வ தால் பாட்டில், பிளாஸ்டிக் பொருட்களை  அதில் கொட்ட வாய்ப்பு இருப்பதால் சுற்றுச் சூழலுக்கும், தண்ணீர் மாசடைவதற்கும் கார ணமாக அமைந்துவிடும். எனவே இங்கு டாஸ் மாக் மதுபானக் கடை அமைப்பதற்கு தடை  செய்து உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்  கொண்டனர்.