தருமபுரி, ஜூலை 26- தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் எதிரில் உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், உங்கரானஅள்ளி மற்றும் இலக்கியம்பட்டி பஞ்சாயத்துக் குட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள ராமன் நகர் பல ஆண்டு களாக மண் சாலையாக உள்ளது. இப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை வசதி, சாக்கடை கால் வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இது வரை செய்து தரப்படவில்லை. மழைக் காலங்களில் இந்த சாலை சேரும், சகதியு மாக மாறிப்போகிறது. எனவே, தார்ச்சாலை அமைத்து தரக் கோரி ஊராட்சி மன்றம் சார்பாக நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை சாலை செப்பனிடப் படவில்லை. இந்நிலையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் சாலையில் நடந்து செல்ல முடியாமல் சேரும், சகதியமாக மாறி மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. சாலை குண்டும், குழி யுமாக மாறியதால் ஆவேசமடைந்த பொது மக்கள் புதிய சாலை அமைத்து தரக் கோரியும் தற்காலிகமாக சாலையை செப்பனிட வலியு றுத்தியும் சேரும், சகதியுமாக மாறிய மண் சாலையில் நாற்று நட்டு நூதனப் போராட் டத்தில் ஈடுபட்டனர்.