districts

img

சிறுத்தை தாக்கிய குழந்தைக்கு:மக்கள் அஞ்சலி

உதகை,ஜன.8- கூடலூர் பகுதியில் சிறுத்தை தாக்கி இறந்த 3 வயது குழந்தை இறந்த நிலை யில், அப்பகுதி பொதுமக்கள் மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.  நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்து உள்ள  மேங்கோ ரேஜ் பகுதியில் சிறுத்தை தாக்கி மூன்று வயது குழந்தை உயிரிழந்தது. இறந்த குழந்தைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அதிகாரி வயல் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சங்க தலைவர் சுரேஷ், காலடி செயலாளர் அஜீஸ், துணைத் தலை வர்கள் ஜோஸ்வின், தையூப் பொருளாளர் மைமோனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.