districts

img

பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டுக்கோட்டையார் நகர் பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர், பிப்.5- 33 ஆண்டுகளாக வசித்து வரும் பட்டுக் கோட்டையார் நகர் பகுதி மக்களுக்கு பட்டா  வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்குள் அப்பகுதி மக்கள் திங்களன்று காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப் போர் நலச்சங்க தலைவர் என்.சேகர், செயலா ளர் சு.சுந்தரம், பொருளாளர் கு.ந.தங்கராசு  ஆகியோர் தலைமையில் திங்களன்று அப்ப குதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது, திருப்பூர் மாநகரம், 55 ஆவது வார்டு ராக்கி யாபாளையம் பட்டுக்கோட்டையார் நகர்  வடக்கு பகுதியில் சுமார் 200 குடும்பங்கள்  கடந்த 33 ஆண்டுகளாக வசித்து வருகின்ற னர். இந்த நிலம் நில உச்சவரம்பின் கீழ் எடுக் கப்பட்டு டேனியல் என்ற நபருக்கு விவசாயம்  செய்ய கொடுக்கப்பட்டது. அவர் அந்த நிலத் தில் விவசாயம் செய்யாமல் லே-அவுட் அமைத்து விற்க முயற்சி செய்ததால் அவ ருக்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட் டது. அதே நேரம், திருப்பூர் பூம்புகார் மற்றும்  இதர பகுதிகளும் போக்குவரத்து காரணங்க ளுக்காக, தங்கள் இருந்த இடத்தை இழந் தும், வெள்ளப்பாதிப்பில் வெளியேறிய பொதுமக்களுக்கும், குடியிருக்க வீடு இல் லாத வசதியற்றவர்களும், இந்த இடத்தில் குடிசைகள் அமைத்து குடியேறினார்கள். அதே காலகட்டத்தில் 5 நபர்கள் தாங்கள் விவ சாயிகள் என்று தவறான தகவல் அளித்து, விவசாயம் செய்கின்றோம் என்று மேற்படி நிலத்தை தலா நபருக்கு 63 சென்ட் என்ற அள வில் பட்டா பெற்றனர். அவர்கள் பட்டா பெற்ற  இடத்தில் 199 குடும்பங்கள் குடியிருந்து வந்த தால், அந்த நிலம் விவசாயத்திற்கு உகந்த தல்ல என்று நிலச்சீர்த்திருத்த அதிகாரிக ளுக்கு மேற்படி 5 நபர்கள் கடிதம் மூலம்  தெரிவித்துவிட்டு, இதே பகுதியில் குடியி ருந்து வந்தனர்.

அப்பகுதியில் குடியிருந்து வருகிற மக் கள் தொடர்ந்து குடிமனைப்பட்டா கேட்டு உண்ணாவிரதம், மனுக்கொடுப்பது என்று பலகட்ட போராட்டத்தின் மூலம் அரசின் கவ னத்திற்கு கொண்டு சென்றனர். அதன் விளை வாக 18/05/1999 ல் அரசாணை எண் 245 இன் படி 5 நபர்களுக்கு வழங்கப்பட்ட பட்டா ஒப்ப டையை ரத்து செய்து விட்டு குடியிருப்போ ருக்கு பட்டா வழங்க அன்றைய திமுக அரசு  உத்தரவு பிறப்பித்தது. ஆனால் சம்பந்தப் பட்ட நபர்கள் பெயரிலிருந்த ஒப்படை ரத்து  செய்யாமலே அன்றைக்கு இருந்த அரசு அதி காரிகள் குடியிருப்போர்க்கு பட்டா வழங்க அரசு நிர்ணயித்த கிரயத்தொகையை ஸ்டேட்  வங்கி மூலமாக பணமாக செலுத்த சொன்ன தின் பேரில், குடியிருப்பவர்கள் பணம் செலுத் தினர். முதல் கட்டமாக 72 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. மீதம் உள்ளவர்கள் பட்டா பெற இருந்த சூழலில் 5 நபர்களில் சுப் பிரமணி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பட்டா வழங்குவதற்கு அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடையாணை பெற்றார். அதை எதிர்த்து அரசு தரப்பில் நில  உச்சவரம்பு துறை மற்றும் வருவாய் துறை  சார்பில் குடியிருப்பவர்களுக்கு ஆதரவாக வழக்கு நடத்தப்பட்டது. ஆனால் சுப்பிரமணி  என்பவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதை யடுத்து தமிழ அரசும், குடியிருப்போர் நலச் சங்கமும் தீர்ப்பை மறு சீராய்வு செய்ய மனுத் தாக்கல் செய்தனர். அதன் பின்னர் குடியி ருப்போர் நலசங்கத்தின் சார்பில் சம்பந்தப் பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் வாரிசு தாரர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக  தீர்வு காணப்பட்டது. தற்போது சம்பந்தப்பட்ட  5 நபர்களும், வாரிசு தாரர்களும் உயர்நீதிம ன்றத்தில் தொடுத்த வழக்கை திரும்பப் பெற்று கொண்டதோடு, தங்களுக்கு வழங் கப்பட்ட ஒப்படையை ரத்து செய்து விட்டு குடி யிருப்பவர்களுக்கு பட்டா வழங்க எவ்வித  ஆட்சேபனையும் இல்லை என்று மாவட்ட ஆட்சியருக்கு எழுத்துப்பூர்வமாக கடிதத்தில்  தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் மூலப்  பட்டாக்களையும் ஒப்படைத்தனர். இருப்பி னும், குடுயிருப்பவர்களுக்கு பட்டா வழங்கு வது கடந்த ஆட்சியில் கவனிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. எனவே நீண்ட  காலமாக குடிமனை பட்டா கேட்டு போராடி  வரும் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டா  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கூறினர்.  இதையடுத்து காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டவர்களை மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் நேரில் சந்தித்து கோரிக் கைகள் குறித்து கேட்டறிந்து இன்னும் மூன்று  வாரங்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர்  டி.ஜெயபால், மாநகரக்குழு உறுப்பினர்கள்  பி.பாலன், டி.ஆறுகுட்டி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் 55 ஆவது வார்டு செயலாளர்  செந்தில் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் கோவிந்தராஜ் உட்பட பொது மக்கள் பலர் பங்கேற்றனர்.