districts

img

கடந்த 5 நாளில் கவியருவியில் குவிந்த மக்கள்

கோவை, ஜன.18- பொங்கல் விடுமுறை நாட்களான கடந்த 5 நாட்களில் மட்டும் கவியருவிக்கு சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு களித்து சென்றுள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழி யார் அணை அருகே வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது  கவியருவி. இங்கு, குளிக்க உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி யூர் சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறையை யொட்டி, கடந்த 5 நாட்களாக கவியருவிக்கு உள்ளூர் மற்றும்  வெளியூரைச் சேர்ந்த, சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்தனர். வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால்,  குளிப்பதற்கு போதிய இடமின்றி சுற்றுலாப் பயணிகள் தவித்த னர். இருந்த போதிலும் பலரும் வெகுநேரம் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர். சில சுற்றுலாப் பயணிகள் அருவியில் ஒரு பகுதியில் ஆங் காங்கே வழிந்தோடும் தண்ணீரிலும், குட்டை போல் தேங்கிய  தண்ணீரிலும் குளித்து உற்சாகமடைந்தனர். கடந்த 5 நாட்க ளில் மட்டும் சுமார் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கவியருவிக்கு வந்து சென்றதாக வனத்துறை யினர் தெரிவித்தனர்.