சேலம், ஜன.22- சேலம் மாநகராட்சியில் தரமில்லாமல் பல இடங்களில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மூன்று நாட்களுக்குள் இடிந்துவிடும் நிலையில் கட்டப் பட்டு வருவதற்கு பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரி வித்து வருகின்றனர். சேலம் மாநகராட்சி, 12 ஆவது வார்டுக்குட்பட்ட பிள்ளை யார் நகர் பகுதியில் சேலம் மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு, பாதாள சாக்கடை திட்ட சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒப்பந்ததாரர் தர மில்லாத கம்பிகளை கொண்டும், சரியான இடுப்பொருட் களை பயன்படுத்தாமலும் பாதாள சாக்கடை திட்ட கட்டு மான பணிகளை செய்து வருவதாகவும் தொடர்ந்து குற்றச் சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில், பிள்ளையார் நகர் பகு தியில் கட்டுமான பணிகள் முடிந்து மூன்று நாட்களே ஆன நிலையில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக போடப்பட்ட காங்கிரீட் சுவர் சரிந்து விழுந்து உள்ளது. இது சம்பந்தமாக பொதுமக்கள் மாநகராட்சியின் பாதாள சாக்கடை திட்ட பணி களை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் தரமில்லாத பொருட்களை உபயோகிப்பதன் மூலமாகவும், முறையாக அளவீடு செய்யாமல் கால்வாய் தோண்டப்பட்டுள்ளது. இத னால் கட்டுமானம் பலவீனமானதால் சாக்கடை கால்வாய், மூன்று நாட்கள் ஆன நிலையில் சரிந்து விழுந்துள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் உரிய முறையில் பாதாள சாக் கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.