districts

img

சாயத்தொழிற்சாலையால் நிலத்தடி நீர் பாதிப்பு: மக்கள் புகார்

நாமக்கல், ஆக.21- சாயத்தொழிற்சாலையால் நிலத் தடி நீர் பாதிப்புக்குள்ளாவதாக குற்றஞ் சாட்டி, திங்களன்று நாமக்கல் ஆட்சியரி டம் பொதுமக்கள் சாயத் தொழிற்சா லையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.  நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பள்ளி பாளையம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் அளித்துள்ள மனுவில் குறிப் பிடப்பட்டுள்ளதாவது: நாமக்கல் மாவட் டம், பள்ளிபாளையம் அக்ரகாரம், வண் ணாம்பாறை ஆஞ்சநேயர் நகர் பகுதி யில் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங் கள் பல வருடமாக வசித்து வருகி றோம். எங்கள் குடியிருப்புக்கு அருகா மையில் சாயத் தொழிற்சாலை இயங்கி  வருகிறது. அந்த சாயத் தொழிற்சாலை யில் இருந்து கழிவு நீர் நிலத்தடி நீரில் கலக்குகிறது. இங்கு குடியிருக்கும் அனைத்து வீட்டின் குடிநீரிலும் சாயக் கழிவு கலக்கிறது. இதனால், அந்த நீரை  பயன்படுத்தும் போது உடல்நல பிரச்ச னைகள், முடி கொட்டுதல், உடல் அரிப்பு, கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.  இதுகுறித்து, சாய ஆலை உரிமை யாளரிடம், சாய நீர் குடிநீரில் கலப்பதாக கூறினால் சாய ஆலை உரிமையாளர் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே முறைகேடாக இயங்கும் சாய ஆலை யின் மீது நடவடிக்கை எடுத்து சாய  ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்  என அதில் தெரிவித்துள்ளனர்.