districts

img

அடுக்குமாடி குடியிருப்புகளில் விரிசல்: நடவடிக்கை எடுக்காததால் மக்கள் சாலை மறியல்

திருப்பூர், டிச.4- நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அடுக்குமாடி  குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டுள் ளது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல்  அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள் திங்களன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.  திருப்பூரை அடுத்த திருமுருகன் பூண்டி நகராட்சிக்குட்பட்ட பூண்டி நகர்ப்  பகுதியில், நகர்ப்புற வாழ்வியல் மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த ஆண்டு கட்டப் பட்டது. இதில், 280 க்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை  மட்டுமே குடிநீர் வருகிறது. அதே போல் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில்  விரிசல் ஏற்பட்டுள்ளது. போதிய மின்  வசதி இல்லை. குறிப்பாக இப்பகுதி யில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காமல் செல்வதால், பொதுமக்களும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் நீண்ட தூரம் நடந்து சென்று பேருந்து ஏறும் நிலை இருந்து  வருகிறது. இப்பிரச்சனைகள் குறித்து  பல முறை அதிகாரிகளிடம்  தகவல் தெரி வித்தும், இதுவரை நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக  கூறப்படுகிறது. இதனால் ஆத்திர மடைந்த  குடியிருப்பு மக்கள்,  அவிநாசி -  திருமுருகன் பூண்டி சாலையில் சாலை  மறியலில் ஈடுபட்டனர்.   தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த அதிகாரிகள் ஒரு வாரக் காலத் திற்குள் பிரச்சனைகளைச் சரி செய்து  கொடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொது மக்கள் கலந்து சென்றனர்.