திருப்பூர் ஜூலை 8- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாற்று இடம் வழங்காமல் பல ஆண்டுகளாக வசித்து வந்த வீடு களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் நக ராட்சி ராயர்பாளையம் செங்குட்டை பகுதியில் 42 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் பல்ல டம் வட்டத்தில் நீர் நிலை ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணியை வரு வாய்த் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் செங் குட்டை பகுதியில் ஆக்கிரமிப்பு களை அகற்றிக் கொள்ள அங்கு வசிக் கும் மக்களுக்கு வருவாய்த் துறை மூலம் நோட்டீஸ் வழங்கி அறிவுறுத் தப்பட்டு இருந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வரு வாய்த் துறையினர் சென்ற போது அங்கு வசித்து வரும் குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப் போது அதிகாரிகளிடம் கால அவகா சம் மற்றும் மாற்று இடம் வழங்கு மாறு கேட்டனர். இதையடுத்து ஆக்கி ரமிப்புகளை அகற்றும் பணி தள்ளி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதி மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை நிராகரித்து நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்பு களை 8 ஆம் தேதிக்குள் அகற்ற உத்த ரவிட்டது. இந்நிலையில் வெள்ளியன்று காலை 7 மணிக்கு பல்லடம் வட் டாட்சியர் நந்தகோபால், டி.எஸ். பி. வெற்றிச்செல்வன், ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன், ரவி, மணிகண் டன், பல்லடம் நகராட்சி ஆணை யாளர் விநாயகம், தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ்குமார் மற் றும் போலீசார், தீயணைப்புத் துறை யினர், வருவாய்த்துறை அதிகாரி கள், நகராட்சி அதிகாரிகள், மின்வா ரிய ஊழியர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஆக்கிர மிப்புகளை அகற்றச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் மாற்று இடம் வழங்கி விட் டுத்தான் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் நந்தகோ பால், டி.எஸ். பி. வெற்றி செல்வன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது அந்த பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி, காளியம்மாள், மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் தங்கள் உடலில் மண்எண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்களைத் தடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அந்த பகுதி மக்கள் மாற்று இடம் வழங்கக்கூடிய பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் என்ற இடத்தை பார்வையிடச் சென் றனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற் றும் பணிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.