districts

img

பசுவை வேட்டையாடிய புலியால் மக்கள் அச்சம்

உதகை, நவ.3- உதகை எச்பிஎப் பகுதியில் புலி புகுந்து பசுமாட்டை வேட் டையாடி சென்றுள்ள சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத் தில் ஆழ்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை யைச் சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த  வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை, கரடி உட் பட பல்வேறு வனவிலங்குகள் உள் ளன. கடந்த சில நாட்களாக வனத் திலிருந்து வெளியேறும் வன விலங்குகள் அவ்வப்போது குடியி ருப்புகளின் அருகே உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இதன் காரணமாக சில நேரங்களில் மனித - விலங்கு மோதல் ஏற்பட்டு, உயிரி ழப்புகள் ஏற்படுகிறது. சில நேரங் களில் இவ்வாறு நகர் பகுதியில் ஒட்டி வரும் வனவிலங்குகள் கால் நடைகளை தாக்கும் சம்பவங்கள் நடக்கிறது. இந்நிலையில் உதகை - கூடலூர் சாலையில் எச்பிஎப், இந்து நகர் பகு தியில் புலி ஒன்று வியாழனன்று  காலையில் சுற்றிக் கொண்டிருந் தது. இந்த சத்தம் கேட்டு வெளியே வந்த அந்த பகுதி மக்கள் தூரத் தில் இருந்தவாறு புலியை வீடியோ எடுத்தனர். அப்போதான் புலி அந்தப் பகுதியில் இருந்த பசு மாட்டை வேட்டையாடி தின்று விட்டு சுற்றி திரிந்தது தெரிய வந் தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், இப்பகுதியில் கடந்த 4 மாதங்களாக புலி நடமாடி  வருகிறது. கடந்த ஜூலை 28 ஆம்  தேதி வளர்ப்பு எருமை ஒன்றை வன விலங்கு வேட்டையாடி, மீதமுள்ள உடலை குடியிருப்பை ஒட்டியுள்ள வனப்பகுதியில் விட்டு சென்றுள் ளது. இதன்பேரில் அங்கு சென்று  வனத்துறையினர் ஆய்வு நடத் தினர். இதன்பின் கால்நடை மருத் துவர் வரவழைக்கப்பட்டு எருமை யின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது, அந்த எரு மையை புலி தாக்கியது உறுதியா னது. ஆனாலும், இதுவரை புலியை பிடிக்க வனத்துறையினர் நடவ டிக்கை எடுக்கவில்லை, என்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், புலி சுற்றித்திரிந்த பகு தியில் மாடு பிணமாக கிடந்துள்ளது. புலி தாக்கி தான் உயிரிழந்தா? என் பது பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும். மேலும், புலி நடமாட்டம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப் பட்டு உள்ளது, எனவே, புலியைப் பிடிக்க தேவையான நடவடிக்கை கள் எடுக்கப்படும், என்றனர். இதனிடையே எச்பிஎப் குடியி ருப்பு பகுதியில் புலி பசு மாட்டின் அருகில் சுற்றித்திரிந்த வீடியோ தற் போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இத னால் அப்பகுதி பொதுமக்கள் அச்ச மடைந்துள்ளனர்.