சேலம், அக்.16- சங்ககிரி அருகே விவசாய நிலத் தில் ரோலிங் மில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக் கள், அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள இ.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற் பட்ட ஊர் மக்கள் திங்களன்று ஆட்சி யர் அலுவலகத்தில் திரண்டனர். பின் னர், நகராட்சி நிர்வாக துறை அமைச் சர் கே.என்.நேருவை சந்தித்து அளித்த மனுவில் தெரிவித்திருப்பதா வது, இ.புதுப்பாளையம் பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் பரப் பளவில் விவசாயம் செய்து வருகி றோம். இக்குடும்பங்களுக்கு விவசா யத்தைத் தவிர வேறு எந்த ஒரு தொழி லும் தெரியாது. இந்நிலையில், தற் போது விவசாய நிலத்தில் ஸ்டீல் ரோலிங் மில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, ரோலிங் மில் அமைத்தால் காற்று மாசு அடையும், நிலத்தடி நீர் மாசடை யும் விவசாய நிலம் பாதிக்கும். இத னால், மக்களுக்கு பல்வேறு வித மான நோய்கள் ஏற்படும். மேலும், விவசாயத்தை நம்பி உள்ள எங்க ளுக்கு விவசாய தொழில் அடியோடு அழிந்து விடும் ஆபத்து உள்ளது. தற்போதுள்ள அரசு விவசாயத்திற்கு உறுதுணையாக நிற்போம் எனக் கூறிய நிலையில், விவசாய நிலத்தில் மில்லை அமைப்பதற்கான நடவடிக் கையை எடுத்து வருகின்றனர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். விவசாய நிலத்தில் மில் அமைப்பதை கைவிட்டு தொழிற் சாலை நடைபெறும் பகுதிகளில் மில் அமைக்க வேண்டும் என தெரிவித்துள் ளனர். இம்மனுவை பெற்றுகொண்ட, அமைச்சர் கே.என்.நேரு உரிய விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதியளித்தார்.