பேரூர் கோவிலை புறந்தள்ளிவிட்டு ஈஷாவிற்கு சலுகையா?
ஒன்றிய அரசை கண்டித்து மக்கள் சந்திப்பு இயக்கம் - சிபிஎம் அறைகூவல்
கோவை, டிச.5- 1500 ஆண்டு பழமை வாய்ந்த பேரூர் கோவிலை புறந்தள்ளிவிட்டு, கார்ப்பரேட் சாமி யார் நடத்தும் ஈஷா நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு சலுகை வழங்க கூடாது என்றும், தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வரும் ஈஷா யோகா மையத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வலியுறுத்தி மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்புகளின் சார்பில் பெரும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்து வது என சிபிஎம் கோவை மாவட்டக்குழு தீர்மா னம் நிறைவேற்றியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு கூட்டம் புதனன்று கே.மனோகரன் தலைமையில் நடைபெற் றது. இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் என்.குணசேகரன், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் குறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள் ளதாவது, கோவை மேற்கு தொடச்சி மலை யையொட்டியுள்ள செம்மேடு உள்ளிட்ட கிரா மங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்ப ளவில் ஈஷா நிறுவனம் செயல்பட்டு வரு கிறது. சுற்றுச் சூழலை பாழ்படுத்துவதோடு, யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து அனுமதியற்ற கட்டுமானங்கள் என எல்லா வகையிலும் சட்ட மீறல்களை இவ்வமைப்பு செய்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றிக் கும் மேலாக கடந்த சில ஆண்டுகாலமாக இங்கு பயிற்சிக்கென வருபவர்கள் அங் கேயே தங்கிவிடுவது, மர்மமான முறையில் மரணம் அடைவது, பயிற்சிக்கு வந்தவர்கள் வீடு திரும்பாதது என மனித உயிரிழப்பு களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. எனவே ஈஷா நிறுவனத்தை தமிழ்நாடு அரசு கையகப்படுத்த வேண்டும். கோவை மாவட் டத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பு கள் – பெரியாரிய – அம்பேத்கரிய அமைப்பு கள் ஒன்றிணைத்து ஈஷா நிறுவனத்தை தமி ழக அரசு கையகப்படுத்த வேண்டும் என பெரும் மக்கள் சந்திப்பை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டம் பல பத் தாண்டு காலமாக பஞ்சாலை மற்றும் சிறு தொழிலில் மாநிலத்தில் முதன்மையாக இருந்து வரும் மாவட்டமாகும். ஒன்றிய பாஜக ஆட்சியின் தவறான கொள்கைகள் காரணமாக இம்மாவட்டத்தின் பொருளாதார சுழற்சியும், வேலை வாய்ப்பும் கடும் நெருக் கடிக்கு உள்ளாகி வருகிறது. ஒன்றிய அர சின் தவறான கொள்கையால், கடும் பஞ்சு விலை உயர்வு – நூல் விலை குறைவு காரண மாக பஞ்சாலை தொழில் முடங்கி நிற்கி றது. ஜிஎஸ்டி மற்றும் மூலப்பொருள் விலை யேற்றத்தால் பல சிறு தொழில்கள் மூடப் பட்டு விட்டது. அதை நடத்தியவர்களில் பலர் வேலைக்கு செல்கிறார்கள். தடாகம், ஆலாந் துறை பகுதியில் செங்கல் உற்பத்தி நிறுத்தப் பட்டதால், இம்மாவட்ட மக்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவே பெரும் பொருட் செலவாகிறது. பல நூறு குடும்பங் களை வாழ வைத்த ஒன்றிய அரசு அச்சக மும் முள்புதராகி வருகிறது. தேசிய பஞ் சாலை கழகத்திற்கு சொந்தமான ஆலைகள் மூடப்பட்டு 3 ஆண்டுகள் கடந்துவிட்டது. கோவைக்கு தனி ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும். தமிழகத்தின் தென் பகு திக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண் டும்.
அதோடு கோவை விமான நிலைய விரி வாக்கம் பல ஆண்டுகளாக பேசப்பட்டே வரு கிறது. ஆனால், நடை முறைப்படுத்தப் பட வில்லை. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பேரூர் கோவிலை புறந்தள்ளி கார்ப்பரேட் சாமியாரின் ஈஷா நிறுவனத்திற்கு மத்திய அரசின் மானியங்கள் வழங்க கூடாது. நாளும் ஒன்றிய அமைச்சர்கள் வருகை தரு வதை ஆதரிக்க கூடாது ஆகிய கோரிக்கை களை முன் வைத்து கோவை மாவட்டத்தில் 2023 பிப்ரவரி 3ஆவது வாரத்தில் தொழில் பாதுகாப்பு மற்றும் மக்கள் கோரிக்கை ஆர்ப் பாட்டத்தை கோவையில் நடத்த இம்மாவட் டக்குழு முடிவு செய்துள்ளது. ஒன்றிய அரசின் தவறான கொள்கை, நடைமுறைகளால் ஒவ்வொரு நாளும் கோவை மாவட்டம், தனது சிறப்புகளை இழந்து வருகிறது. இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல நேர்மை இல்லாததால் பாஜக கட்சி யின் மாநிலத் தலைவர், கோவை மக்களவை உறுப்பினர் ஒன்றிய அரசின் திட்டங்களை தடுக்கிறார் என்று பொய்யுரைத்து பரப்புரை செய்ததை இம்மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாலிபர் தற்கொலை
ஈரோடு, ஜன.5- கோபி அருகே உள்ள அயலூரைச் சேர்ந்தவர் வடி வேலின் மகன் மனோஜ் குமார் (25). நாதஸ்வரம் வித் துவானான இவருக்கு மதுப் பழக்கம் இருந்து வந்துள் ளது. இவர் வயிற்று புண் னால் (அல்சர்) அவதிபட்டு வந் ததாக கூறப்படுகிறது. இந்நி லையில், ஜன.3 ஆம் தேதி யன்று திருவிழாவிற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மறுநாள் காலை வீட்டின் கதவை திறக்கவில்லை. இதை யடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவர் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண் டது தெரியவந்தது. இதுகு றித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வெல்டிங் எந்திரம் வெடித்து வாலிபர் படுகாயம்
கோவை, ஜன.5- கோவையில் வெல்டிங் வைக்கும் எந்திரம் வெடித்ததில் வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (27). இவர் கோவை சிட்கோ பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சதீஸ் குமார் கம்பெனியில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்த போது, வெல்டிங் எந்திரம் திடீரென வெடித்து தீ பிடித்தது. இதில், சதீஷ்குமார் உடலிலும் தீப்பிடித்து, காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக சுந்த ராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து காயம் அதிகமாக இருந்த தால் அவரை மேல் சிகிச்சைக்காக சாய்பாபா காலனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து சதீஷ்குமாரின் உறவினர்கள் போத்தனூர் காவல் நிலை யத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் உரிய பாதுகாப்பின்றி பணி செய்ய நிர்பந்தம் செய்ததாக அந் நிறுவன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சிறைச்சாலை சார்பில் மேலும் ஒரு பெட்ரோல் பங்க்
கோவை, ஜன.5- கோவை மத்திய சிறைச்சாலை சார் பில் மேலும் ஒரு பெட்ரோல் பங்க் அமைக்கப்பட உள்ளது. கோவை மத்திய சிறைச்சாலை சார் பில் கைதிகள் மறுவாழ்வு திட்டத்தில் காந்திபுரம், நஞ்சப்பா சாலையில் சிறைத் துறைக்கு சொந்தமான இடத்தில் சிறை சந்தை நடத்தப்பட்டு வருகிறது. சிறை சந்தையினை விரிவுபடுத்தும் விதமாக கோவை மத்திய சிறை, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து கோவை நஞ்சப்பா சாலையில் பெட் ரோல் பங்க் அமைக்கப்பட்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரு கிறது. இந்த பெட்ரோல் பங்க் வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கோவை மத்திய சிறையில் மேலும் ஒரு பெட் ரோல் பங்க் அமைக்க முடிவு செய்யப் பட்டது. இதற்காக கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள பாரதியார் சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழக சிறைத்துறை கூடு தல் காவல்துறை தலைவர் சண்முக சுந்த ரம், சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, கூடுதல் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரே சன் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி கள் கூறுகையில், கோவை மத்திய சிறை மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் 2 ஆவதாக ஒரு பெட்ரோல் பங்க் அமைக்கப்படுகிறது. 3 மாதத்தில் பணி கள் நிறைவடைந்து, பெட்ரோல் பங்க் திறக்கப்படும். இதில், நன்னடத்தை அடிப்படையில் 30 கைதிகள் பணியாற் றுவார்கள், என்றனர்.
பல்லடம் அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட பெண் உயிரிழப்பு
திருப்பூர், ஜன.5 – பல்லடம் அருகே காதலனால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த பெத்தாம் பாளையம் பகுதியில் பூஜா (19) என்ற பெண்ணை, அவரது காதலன் லோகேஷ் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்தார். பாதிக்கப்பட்ட பெண் 90 சதவிகித தீக்காயங்கள் உடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டார். பல்லடம் போலீசார் லோகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பலத்த தீ காயமடைந்த பூஜா சிகிச்சை பலனளிக்காமல் புதனன்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் இளைஞர் பலி - தாராபுரத்தில் பெண்கள் சாலை மறியல்
தாராபுரம், ஜன.5- தாராபுரம் அருகே கல்லூரி மாணவன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு காரண மானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் முருகன். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை யில் ஊழியரான இவரது மகன் தனுஷ் (17). தாராபுரம் பிஷப் தார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த டிச.31 ஆம் தேதி நள்ளிரவு தாராபுரம்-கரூர் சாலையில் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி நண்பர்களுடன் சாலையின் நடுவே புத்தாண்டு தின வாச கங்கள் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் தனுஷ் மற்றும் நண்பர்கள் கவிராஜ் (14), ஜீவானந்தம் (16) ஆகியோர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தனுஷ் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பல னின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கவினேஷ் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் பலத்த காயமடைந்து கோவை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் உயிர் ஆபத் தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விபத்து நடைபெற்று ஐந்து நாட்கள் ஆகி யும் விபத்துக்கு காரணமான வாகனத்தையோ அதனை ஓட்டி வந்த நபர்களையோ போலீசார் அடையாளம் காணவில்லை. இதனால் ஆவேசமடைந்த எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த 100 பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் தாராபுரம்- கரூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதையறிந்த தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப் பாளர் தன்ராஜ், காவல் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடு பட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், இந்த விபத்து நடந்த ஐந்த நாட்களாகியும் அதற்கு காரணமானவர்களை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. மேலும் தாரா புரம்-கரூர் சாலையில் எம் ஜி ஆர் நகர் அருகே வேகதடை மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்திற்கு அரசாங்கம் உடனடியாக இழப்பீடுகளை வழங்க வேண்டும் என தெரி வித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் உறுதி கூறப்பட்டது. இதையடுத்து பொது மக்கள் சாலைமறியலை கைவிட்டனர். இதனால் தாராபுரம் -கரூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.
வங்கியில் தீ விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
தாராபுரம், ஜன.5- தாராபுரம் அருகே கனரா வங்கியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் முக்கிய ஆவணங்கள் உள்பட ரூ.10 லட்சம் மதிப்பி லான பொருட்கள் எரிந்து சேதமானது. தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையத்தில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. புதனன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. இதையறிந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவ லின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீ மற்ற கட்டிடங்களுக்கு பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தினால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி தெரிவிக்கையில், மின் கசிவு காரணமாக இணையதள சேவைக்காக பொருத்தப் பட்டிருந்த மோடத்தில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர். தீ விபத்தில் வாடிக்கையாளர்கள் கடன் பெறுவ தற்காக சமர்ப்பித்த வீட்டுப் பத்திரங்கள் மற்றும் ரூ.10 மதிப் பிலான கணினி, ஏசி, மின் விசிறிகள் ஆகியவை எரிந்து நாச மாகின. இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆடு, கோழி களவாடும் கும்பல்!
விஷம் வைத்து நாய்களைக் கொல்லும் அட்டூழியம்
திருப்பூர், ஜன.5- திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூர் அருகே போத்தம்பாளையம் பகுதியில் ஆடு, கோழி திருட்டில் ஈடு படும் கும்பல், அந்த திருட்டுக்கு இடையூறாக இருக்கும் நாய்களை விஷம் வைத்துக் கொள்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சேவூர் அருகே போத்தம்பாளையம் பகுதியில் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் பலர் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர். சில மாதங்களாக இரவு நேரத்தில் ஆடு, கோழிகளை அடை யாளம் தெரியாத நபர்களால் திருடப்படுகின்றன என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில், திங்களன்று இரவு அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் பாதுகாப்புக்கு உள்ள 3 நாய்களுக்கு, கோழிக் கழிவில் சிலர் விஷம் வைத்து விட்டு சென்றதாக கூறப்படு கிறது. அந்த கோழிக்கழிவை உட்கொண்ட, 3 நாய்களில், 2 நாய்கள் இறந்து விட்டன என அப்பகுதி மக்கள் கூறினர். ஆடு, கோழிகளை திருடுவதற்கு வரும் நபர்களை, வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் துரத்துவதாலும், தங் களின் திருடும் முயற்சிக்கு நாய்கள், இடையூறாக இருப்ப தாலும் தான், அவற்றை விஷம் வைத்து மர்ம நபர்கள் கொல் கின்றனர் என்று பொதுமக்கள் கூறினர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த கர்ணன், ராஜ சேகர், ராஜேஷ் குமார் ஆகியோர், சேவூர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதி யில் இரவு நேரத்தில் சேவூர் போலீசார் ரோந்து பணியில் ஈடு பட்டனர்.
கிணற்றில் கவிழ்ந்த லாரி
திருப்பூர், ஜன.5- வெள்ளக்கோவில் முத்தூர் சாலை துரை ராம சாமி நகரில் பி.எஸ். மணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் பாழடைந்த கிணற்றின் அருகே யாரும் செல்ல முடியாதவாறு தடுப்புகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த கிணற்றை மூடுவ தற்காக அவ்வப்போது டிராக்டர், டிப்பர் லாரிகளில் கட்டட இடிபாடுகள், குப்பை, மண் கொட்டப்பட்டு வந்தன. இந்நிலையில், ஹாலோ பிளாக் தயா ரிக்கும் தொழில் நடத்தும் உரிமையாளர் வேலகவுண் டன்பாளையம் பி. ஆனந்தன் (50) தனது டிப்பர் லாரியில் மண் கொட்டியபோது, நிலைதடுமாறி 20 அடி ஆழ மான கிணற்றில் லாரி கவிழ்ந்தது. லாரியை ஓட்டிச் சென்ற ஆனந்தன் உயிர் தப்பினாா்.
திருப்பூரில் இளைஞர் கொலை
திருப்பூர், ஜன. 5 - திருப்பூர் கல்லம்பாளையம் பகுதியில் கை, கால்களை கட்டி போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்தக் கொலையில் தொடர்புடையவர்களை கண்டு பிடிக்க திருப்பூர் வடக்கு போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்துள்ளனர். திருப்பூர்-கல்லம்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை ஓரம் உள்ள காட்டுப் பகுதியில் துர்நாற்றம் வீசி உள்ளது. இதுகுறித்து, அப் பகுதியை சேர்ந்தவர்கள், திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு சோதனை செய்தபோது காட்டுப்பகுதியில் இருந்த பயன்படுத்தப்படாத கட்டிடத்தின் உள்ளே அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதை கண்டனர். மேலும் கை, கால்கள் கட்டப்பட்டு நிலையில் அந்த சடலம் இருந்தது. சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இறந்த நபர் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த மேட்டுக் காட்டு வலசு பகுதியை சேர்ந்த அஜித்குமார் (23) என்பதும், இவர் ராக்கியாபாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவ னத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித்குமாரை காணவில்லை என அவர்களது பெற்றோர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அவர் கள் கொடுத்த அங்க அடையாளத்தின்படி, கொலை செய்யப்பட்டது அஜித்குமார் என தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக மூன்று தனிப் படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு திருப்பூர் மாவட்டத்தில் 23.26 லட்சம் வாக்காளர்கள்
திருப்பூர், ஜன.5 - திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 23 லட்சத்து 26 ஆயிரத்து 486 வாக் காளர்கள் உள்ளனர் என இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், அவி நாசி, திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, தாராபுரம், காங்கேயம், உடுமலைப் பேட்டை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழி காட்டுதல் படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி வியாழனன்று திருப்பூர் மாவட்ட எட்டு தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் வெளியிட்டார். இந்த இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக் காளர்கள் 11 லட்சத்து 44 ஆயிரத்து 309 பேர், பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 81 ஆயிரத்து 843 பேர், மாற்று பாலினத்தவர்கள் 334 பேர் என மொத்தம் 23 லட்சத்து 26 ஆயி ரத்து 486 வாக்காளர்கள் பதிவு செய்யப் பட்டுள்ளனர். மேலும் கிராமம் மற்றும் நகர்புறங்களில் 18 வயது நிரம்பிய இளைஞர்களை வாக் காளர் பட்டியலில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அரசியல் கட்சியினரும் இளைஞர்களை அதிகளவு வாக்காளர் பட்டியலில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் வினீத் கேட்டுக் கொண்டார்.
தினமும் 10 டன் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக புகார்
திருப்பூர், ஜன.5- திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் இருந்து தினமும் 10 டன் அளவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக காங்கேயம் வட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட் டுள்ளது. தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா செவ்வாயன்று காங்கயம் வட்டாட்சியர் புவனேஸ்வரியிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியுள்ள தாவது: காங்கேயம் வட்டத்திற்கு உட்பட்ட வெள்ளகோவில் பகுதியில் வசிக்கும் ஒருவர், தனக்குச் சொந்தமான 14 வேன்கள் மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில், மூலனூர், காங்கேயம் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள சின்ன தாராபுரம், அரவக்குறிச்சி, ஈரோடு மாவட் டத்தில் உள்ள கொடுமுடி ஆகிய பகுதிகளில் பொது மக்களிடம் ரேசன் அரிசி ரூ.4 முதல் ரூ.5 வரை விலை கொடுத்து வாங்கப்படு கிறது. இவரது நேரடி முகவர்கள் மூலம் மாதத்தின் முதல் வாரம் இது போல் வாங்கப் படுகிறது. இவ்வாறு வாங்கப்படும் ஒரு கிலோ ரேசன் அரிசியை ரூ.8-க்குப் பெற்று, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3 தனியார் அரிசி ஆலைகளுக்கு நாள் ஒன்றுக்கு 10 டன் ரேசன் அரிசி ஒரு கிலோ ரூ.15 வீதம் விற் பனை செய்யப்படுகிறது. சட்டவிரோதமாக மேற்கண்ட முறையில் பெறப்பட்ட ரேசன் அரிசியை, இந்த 3 தனியார் அரிசி ஆலை களும் அரசிற்கு நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு தமிழக அரசு இலவசமாக மக்க ளுக்கு வழங்கும் ரேசன் அரிசியைக் கடத்தி, பல லட்ச ரூபாய் அளவில் மோசடியில் ஈடு பட்டு வருகின்றனர். எனவே வட்டாட்சியர் இப்பிரச்னையில் உரிய விசாரணை மேற் கொண்டு, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபடும் கடத்தல் கும்பல் மீது சட்ட ரீதியாக நடவ டிக்கை வேண்டும். மேலும் ரேசன் அரிசி கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரி கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
என கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. இது குறித்து காங்கேயம் வட்ட வழங்கல் அலுவலர் எம்.சுந்தரமூர்த்தி கூறியபோது, இந்த மனு மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப் படும், என்றார். ரேசன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை சார்பு ஆய் வாளர் கார்த்தி மற்றும் போலீசார் பல்லடம் ஒன்றியம் 63 வேலம்பாளையம் அருகில் ரேசன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தடுப்பு சம்மந்தமாக சந்தேகத்தின் அடிப்படை யில் சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாருதி ஆம்னி வாகனத்தில் சோதனை செய்ததில் ரேசன் அரிசி 600 கிலோ இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த அரிசி கொண்டு வந்த நபரை பற்றி விசாரணை செய்ததில் தற் போது சாமளாபுரம் பகுதியில் வசித்து வந்த, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஸ் வரன் என்பது தெரிய வந்தது. இவர் மங்கலம், 63- வேலம்பாளையம் அருகில் பொது மக்களிடம் குறைந்த விலைக்கு அரிசி வாங்கி வட மாநிலத் தவருக்கு கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய சுமார் 600 கிலோ ரேசன் அரிசியை கொண்டு சென்றது தெரியவந்தது. எனவே ரேசன் அரிசி கடத்திய குற்றத்திற்கு அவரை கைது செய்து, அவரிடமிருந்து அரிசி யையும் வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.