கோவை, செப்.22- ஒருவரை பிரதமர் என்பது சர்வாதி காரம், அதற்கு எதிராக இந்தியா வெகுண்டு எழும் என மக்கள் நீதி மய் யம் தலைவர் கமல் ஹாசன் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசு கையில், சனாதனம் என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக ஒரு சின்னப்பிள் ளையை அடியோ அடி என அடிக்கிறார் கள். அது அவரது தாத்தாவிற்கு தாத்தா சொன்ன விஷயம். எங்களுக்கு அந்த வார்த்தையை சொன்னவர் பெரியார். சாமி இல்லை என சொல்வது பெரியா ரின் வேலை அல்ல, சமுதாயத்திற்காக கடைசி வரை வாழ்ந்தவர் பெரியார். திமுகவோ, வேறு எந்த கட்சியும் பெரி யாரை சொந்தம் கொண்டாட முடியாது. பெரியாரை தமிழ்நாடே சொந்தம் கொண் டாடும். நாடாளுமன்ற தேர்தலை ஒன் றிய அரசு சீக்கிரம் கொண்டு வரு வார்கள். இந்த வயதில் அரசியலுக்கு வந்ததற்கு நான் மன்னிப்பு தான் கேட்க வேண்டும். கலைஞர் என்னை திமுக விற்கு வருமாறு அழைத்தார். அப்போது நான், கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப் போகிறேன் என சொல்லியிருக்க வேண் டும். அப்பா காங்கிரசில் இருப்பதால் காங்கிரசில் சேர்கிறேன் என சொல்லி யிருக்க வேண்டும். அப்போதே அரசிய லில் இறங்கி இருக்க வேண்டும். நாங்கள் இந்தி ஒழிக என சொல்ல வில்லை. தமிழ் வாழ்க என்று சொல்கி றோம். இந்தி பேசினால் தான் வேலை என்றால், அந்த வேலை வேண்டாம். 8 கோடி பேர் தமிழ்நாட்டை காப்பாற்ற வேலை செய்தாலே, முதன்மை மாநில மாகி விடும். அரசியல் என்றால் சூது வாது இருக்கும் என்பதை ஏற்றுக் கொள் ளக்கூடாது. வெறி பிடிக்காமல் இருக்க அன்பு ஒன்று மருந்து. அன்பு ஒன்று தான் எனக்கு தெரிந்த மதம், அதைவிட பெரிய மதம் மனிதம், என்றார்.