districts

img

மழைக்காலங்களில் தனித்தீவு போல உள்ளது சிறுபாலம் அமைக்க மக்கள் கோரிக்கை

தருமபுரி, ஏப்.17- நெக்குந்திலிருந்து முருகன் நகருக்கு செல்லும் வழி யில் ஓடையின் குறுக்கே சிறுபாலம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் நெக்குந்தி,  முருகன்‌நகர் கிராமம்  உள்ளது. முருகன்‌ நகரில் 60க்கும் மேற் பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். நெக்குந்தி கிரா மத்திற்க்கும் முருகன் ‌நகருக்கு இடையில் நாகவதி அணை யின் கால்வாய் நீர் செல்கிறது. குறிப்பாக மழைகாலங் களில் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடுவதால் எங்கள் கிராமம் தனி தீவு போல காட்சியளிக்கிறது. அதுபோன்ற நாட்களில், யாரும் கிராமங்களுக்குள் வருவதற்கோ, இங்கிருந்து வேறு  இடம் செல்வதற்கோ வழியில்லாமல் திணறி வருகிறோம். போக்குவரத்திற்க்கும் வேறு வழி இல்லை. தண்ணீர் செல்லும் காலங்களில் மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல முடியவில்லை, கூலி வேலைக்கு செல்வோர் செல்ல முடிவ தில்லை. சிலநேரங்களில் ஓடை தண்ணீரில் இறங்கி செல்லும்  போது அவர்கள் நீரில்  அடித்து செல்வதும் உண்டு.  ஒவ்வொரு வருடமும் மழைகாலங்களில் நகாவதி அணை யின் நீர் பெருக்கெடுத்து ஓடும்போது, நாங்கள் சிரமப்பட்டு வருகின்றோம். அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும்  எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே,  தண்ணீர் ஓடையின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி மனு அளித்தனர்.