தருமபுரி, ஆக. 5- நல்லாம்பள்ளி ஒன்றித் திற்குட்பட்ட பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், கம்மம்பட்டி ஊராட்சிக் குட்பட்ட மலையூர் காடு, மூலக்காடு, மணியக்காரனுர் உள்ளிட்ட ஐந்து கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங் கிருந்து தினந்தோறும் கூலி வேலை, பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தருமபுரி மாவட்டத் தில் இருந்து நேரடி பேருந்து வசதி கிடை யாது. இவர்கள் சேலம் மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்து வசதிகளை நம்பி உள்ள னர். இந்நிலையில், இக்கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலை 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டு களாக சாலை முழுவதும் சேதமடைந்து குண்டும், குழியுமாக தரமற்ற சாலையாக மாறிவிட்டது. இதனால், சாலை மிகவும் சேதமடைந்து இருப்பதால் சேலம் மாவட்டத்தில் இருந்து இயக்கபட்ட அரசு பேருந்துகள் மலையூர் காடு பகுதிக்கு வராமல் சோழியானூர் பகுதியோடு திரும்பி சென்று விடுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் பேருந்து வசதி உள்ளது. மற்ற நேரங்களில் பேருந்து வசதி இல்லை. இது குறித்து, அரசு அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இந்நிலையில், பழுதடைந்த சாலையை செப்பனிடுவதற்கு பதிலாக, சாலையில் உள்ள பள்ளங்களில் மண்ணை நிரப்புகின்றனர். இதனால் தார்ச்சாலை, மண் சாலையாக மாறி வருகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி பழுதடைந்த தார்ச்சாலையை செப்பனிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.