districts

img

ஓய்வூதியர் தினம் சிறப்பு கருத்தரங்கம்

திருப்பூர், டிச.17- மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஓய்வூ தியர் சங்கங்களின் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பு  குழு சார்பில் டிசம்பர் 17ஆம் தேதி சனிக்கிழமை ஓய்வூ தியர் தினம் சிறப்பு கருத்தரங்கம் திருப்பூரில் நடைபெற் றது. மாவட்ட தலைவர் ஜி.சண்முகம் தலைமையில், பழைய  ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.  அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850 வழங்க  வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த  கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னதாக, தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி  ஆசிரியர் நல  சங்க நிர்வாகி ஜெயபிரகாசம், தமிழ்நாடு மின்வா ரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் பி. இ.அச்சு தன், அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கம் கோவை  பகுதி துணைத் தலைவர் கே.கிருஷ்ணன், அரசு ஊழியர்  சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் நிசார் அஹமது  ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு அரசு போக்குவ ரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில துணை  பொதுச்செயலாளர் பி.செல்வராஜ், தமிழ்நாடு அரசு  அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாநிலச் செயலாளர்  எஸ்.ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் ஏ.  ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார்.