திருப்பூர், அக். 3 - அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் சார்பாக அக்.1 அன்று உலக ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் ஓய்வூதியர் தின கருத்தரங்கம் நடைபெற்றது. தொலைத்தொடர்பு பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் பா.சௌந்தரபாண்டியன் தலைமை வகித் தார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஜி.சண்முகம் வரவேற்றார். அஞ்சல் பகுதி ஓய்வூதியர் சங்கத்தின் மேற்கு மண்டல செயலாளர் கருணாநிதி கலந்து கொண்டு ஓய்வூதியர் தின சிறப்புரை ஆற்றினார். ஓய்வூதி யர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ஏ.முகமது ஜாபர் வாழ்த்திப் பேசினார். இந்த கருத்தரங்கில் ஓய்வூதியர்கள் சுமார் நூறு பேர் கலந்து கொண்டனர். ஓய்வூதியர் சங்கத்தின் திருப்பூர் கிளைச் செயலாளர் விசுவநாதன் நன்றி கூறி னார்.