சென்னை, டிச. 29- 4ஜி சேவையை உடனடி யாக பிஎஸ்என்எல் நிறுவ னத்திற்கு வழங்க வேண்டும் என அகில இந்திய பிஎஸ் என்எல் டிஓடி பென்சனர்ஸ் அசோசியேசன் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அச்சங்கத்தின் சென்னை மாவட்ட 5 ஆவது மாநாடு வேப்பேரியில் உள்ள தோழர் முருகைய்யா நினை வரங்கில் (மகாராஸ்டிர பவன்) புதனன்று (டிச. 29) நடைபெற்றது. அமைப்புச் செயலாளர் சி.சுவாமி குருநாதன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் டி.கோதண்டம் வரவேற்றார். அமைப்புச் செயலாளர் வி.சுப்ரமணியம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலச் செயலாளர் என்.குப்புசாமி மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் டி.கோதண்டம் வேலை, அமைப்பு அறிக்கை யையும், பொருளாளர் பி.வி.சிவசங்கரன் வரவு,செலவு அறிக்கையையும் சமர்ப் பித்தனர். பி.எஸ்.என்.எல். எம்ளாயீஸ் யூனியன் அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா சிறப்புரையாற்றினர்.
மாநில பொருளாளர் எஸ்.நடராஜா, உதவி தலைவர் பி.மாணிக்க மூர்த்தி, பிஎஸ்என்எல் எம்ப் ளாயீஸ் யூனியன் மாவட்டச் செயலாளர் கே.சீனிவாசன் மற்றும் சகோதர சங்கங்க ளின் தலைவர்கள் கே.நவீன் குமார், கே.சக்திவேல், பெர்லின் கனகராஜ், ஆர்.சிரில் ராஜ் ஆகியோர் வாழ் த்திப் பேசினர். சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.கே.நரசி ம்மன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். எஸ்.தங்க வேல் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள்: மாவட்டத் தலைவ ராக எஸ்.அன்புமணி, செயலாளராக டி.கோதண் டம், பொருளாளராக கே.வி. சிவக்குமார் உள்ளிட்ட 19 பேர் தேர்வு செய்யப்பட்ட னர். தீர்மானங்கள் ஒன்றிய அரசு தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக் களை விற்பனை செய்வதை கைவிட வேண்டும்,
பிஎஸ் என்எல், ரயில்வே, இன்சூ ரன்ஸ், வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங் களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், பெட்ரோலியப் பொருட்க ளின் மீதான கலால் வரிகளை ஒன்றிய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும், 2019 அக்டோபரில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டு இன்னும் வழங்கப்ப டாமல் இருக்கும் 4ஜி சேவையை உடனடியாக பி.எஸ்.என்.எல். நிறுவனத் திற்கு வழங்க வேண்டும், 1.1.2017 முதல் ஓய்வூதியர் களுக்கு 15 விழுக்காடு நிர்ணய பலனுடன் கூடிய ஐடிஏ பென்சன் மாற்றத்தை உடனே அமல்படுத்த வேண் டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.