districts

img

தருமபுரியில் ஓய்வூதியர் தின விழா

தருமபுரி, டிச.20- ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப் புக்குழு சார்பில் தருமபுரியில் ஓய்வூதியர் தின  விழா நடைபெற்றது. மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கி ணைப்புக்குழு சார்பில் ஓய்வூதியர் தின விழா தருமபுரி செங்குந்தர் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலைவர் டி.பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் பி.சுப்பிரமணி வரவேற்றார். போக்குவ ரத்து ஓய்வூதியர் நல அமைப்பின் மாநில  இணைச்செயலாளர் கே.குப்புசாமி துவக்க  உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநிலச்  செயலாளர் குரு.சந்திரசேகரன் சிறப்புரை யாற்றினார். இதில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநில உதவித்தலைவர் ஆர்.கோபா லன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பழனிசாமி, செய லாளர் எம்.பெருமாள், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்டத் தலை வர் ஆர்.சுந்தரமூர்த்தி, எல்ஐசி ஒருங்கி ணைப்புக்குழு மாவட்ட இணைச்செயலாளர் ஏ.சோமசுந்திரம், அஞ்சல் ஓய்வூதியர் சங்க  மாவட்டத் தலைவர் முருகேசன், போக் குவரத்து நல அமைப்பின் மாவட்ட இணைச் செயலாளர் கே.காவேரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.