districts

img

60 வயது விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.3000 பென்சன்

தருமபுரி, அக்.31- 60 வயது  பூர்த்தியடைந்த விவசாய தொழிலாளர்கள் அனைவருக்கும் 3  ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும் என விதொச மாநாடு வலியுறுத்தியுள்ளது. அகில இந்தியா விவசாய தொழிலா ளர்கள் சங்கம் பென்னாகரம் பகுதிகுழு 3  ஆவது மாநாடு பென்னாகரத்தில் நடை பெற்றது. பகுதிக்குழு தலைவர் வெங்க டாச்சலம் தலைமை வகித்தார்.சி.குப்பு சாமி சங்க கொடியேற்றி வைத்தார். மாவட்ட தலைவர் வி.ரவி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். பகுதிகுழு  செயலாளர் வி.முனிராஜ் செயலாளர் அறிக்கை முன்வைத்தார். மாவட்ட செய லாளர் எம்.முத்து, மாவட்ட பொருளா ளர் இ.கே.முருகன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.  இம்மாநாட்டில், பென்னாகரம் வட் டத்தில் உள்ள நிலமற்ற விவசாய் தொழி ளாளர்களுக்கு 2 ஏக்கர் நிலம் இலவச மாக வழங்க வேண்டும். பென்னாகரம் பேரூராட்சிக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும். இத்திட்டத்தை விவசாய வேலைக்கு பயன்படுத்த வேண்டும். 60  வயது பூர்த்தி அடைந்த அனைந்து விவ சாய தொழிலாளர்களுக்கு ரூ.3000 பென் சன் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் பகு திக்குழு தலைவராக வி.வெங்கடா சலம், செயலாளராக எம்.சிவா, பொரு ளாளராக வி.முனிராஜ் உள்ளிட்ட 15  பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்த லிங்கம் நிறைவுறையாற்றினார். மா. தேவன் நன்றி கூறினார்.