திருவள்ளூர், ஆக 30- கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் இடைக்கால பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்திட வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலகம் சங்கம் சார்பில் புதனன்று (ஆக-30), பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. வட்டக் கிளை செயலாளர் கீதா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பெண் அலுவலர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசி அரசு நிர்வாகத்தில் அத்துமீறி அடாவடித்தனமாக செயல்படும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் செயலை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.