districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பேட்டரிக்கு கூடுதல் விலை: பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

கோவை, பிப்.25- பேட்டரிக்கு கூடுதல் விலை வாங்கியதற்காக பல் பொருள்  அங்காடிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  கோவை-வடவள்ளி அருகேயுள்ள குருசாமி நகரைச் சேர்ந்தவர் ரவீந்திரநாத், வழக்கறிஞர். இவர் கடந்த 2021ஆம்  ஆண்டு வடவள்ளி-தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள ஒரு  தனியார் பல்பொருள் அங்காடியில் பேட்டரி வாங்கியுள் ளார். அதன் விலை ரூ.16 ஆகும். ஆனால் ரூ.41 கட்டணமாக  வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ரவீந்திரநாத் அந்த பல்பொருள் அங்கா டியில் கேட்டதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இது குறித்து கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணை யத்தில் ரவீந்திரநாத் முறையிட்டுள்ளார். அந்த வழக்கில் குறைதீர் ஆணைய தலைவர் தங்கவேல், பல்பொருள் அங் காடியின் சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக வழக்கறிஞர் ரவீந்திரநாத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என  வெள்ளியன்று உத்தரவிட்டார். மேலும், வழக்கு செலவுக் காக ரூ.5,000, பேட்டரிக்கு கூடுதலாக வாங்கிய தொகை ரூ.25  சேர்த்து ரவீந்திரநாத்துக்கு வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வனிதா ரோசி ஆஜ ரானார். 

பிஆர்எஸ் மைதானத்தில் வாகனங்கள் தீப்பிடிப்பு

கோவை, பிப்.25- கோவை மாநகர காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, பிஆர்எஸ் மைதா னத்தில் நிறுத்திவைக்ப்பட்டிருந்த வாக னங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பர பரப்பு ஏற்பட்டது. கோவை மாநகர காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கோவை பிஆர்எஸ் மைதானத்தின் ஒரு பகுதி யில், மாநகர பகுதிகளில் உள்ள காவல்  நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு  விசாரணையின் கீழ் உள்ள வாகனங்கள் என  சுமார் 200க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும்  நான்கு சக்கர வாகனங்கள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.  இந்நிலையில் வெள்ளியன்று மாலை திடீரென சுமார் 30க்கும் மேற்பட்ட வாகனங் கள் தீப்பற்றி எரிந்துள்ளன. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை யினர் தீயை அணைத்தனர். வெயிலின் காரணமாக தீப்பற்றி இருக்க கூடும் என கூறப்படும் நிலையில், காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமாகின. வாகனங் கள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும்  கரும்புகை சூழ்ந்து அப்பகுதியில் சிறிது  நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

21 குழந்தை தொழிலாளர்கள்,  17 வளரிளம் பருவத்தினர் மீட்பு'

நாமக்கல், பிப்.25- நாமக்கல் மாவட்டத்தில் தொழில் நிறுவ னங்களின் பணியமர்த்தப்பட்டிருந்த 21 குழந்தை தொழிலாளர்கள், 17 வளரிளம் பருவத்தினர் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட  ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தை  தொழிலாளர் தடுப்பு படை செயல் திட்ட  கூட்டம் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், நாமக்கல் மாவட் டத்தில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத்  தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத் துதல் சட்டத்தின் கீழ் கடைகள், நிறுவனங்கள்,  உணவு நிறுவனங்கள், செங்கல் சூளைகள், டெக்ஸ்டைல்ஸ், நூற்பு ஆலைகள் மற்றும் கோழிப்பண்ணைகளில் இதுவரை 199 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த ஆய்வுகளில் 14 வயது நிறைவடை யாத 21 குழந்தை தொழிலாளர்கள், 18 வயது நிறைவடையாத 17 வளரிளம் பருவத்தினர் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர். இவர் களை பணிக்கு அமர்த்திய 21 நிறுவனங் களின் உரிமையாளர்கள் மீது குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்  தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப் படுத்துதல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட வழக்கு களில் 12 வழக்குகள் முடிவுற்று ரூ.2 லட்சத்து  86 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப் பட்டு உள்ளது. தொடர்ந்து குழந்தை தொழி லாளர்கள் தொடர்பான ஆய்வுகள் மேற் கொள்ளப்பட வேண்டும். மேலும் கொத் தடிமை தொழிலாளர்கள் தொடர்பாகவும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை நாமக்கல் மாவட் டத்தில் 95 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வு நிதி வழங்கப்பட்டு உள்ளது, என்றார். முன்னதாக, இக்கூட்டத்தில் தொழிலாளர்  இணை ஆணையர் (ஈரோடு) ரமேஷ், நாமக்கல் உதவி ஆட்சியர் மஞ்சுளா, தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திரு நந்தன், துணை காவல் கண்காணிப்பாளர் லட்சுமணன் மற்றும் அரசுத்துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிமெண்ட் இருக்கைகள் அமைக்க கோரிக்கை

திருப்பூர், பிப். 25 - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் வசதிக்காக சிமெண்ட் இருக்கைகள் அமைத் துத் தரும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்  நகர்மன்ற உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் கோரியிருக் கிறார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு  பணி நிமித்தமாக தினசரி ஏராளமான பொதுமக்கள் வருகை  தருகின்றனர். அவர்கள் காத்திருப்பதற்காக மர நிழல்கள் மற் றும் கட்டிட ஓரங்களில் தரையில் அமர்ந்துள்ளனர். மாவட்ட  நிர்வாகம் மக்கள் சிரமத்தை கவனத்தில் கொண்டு, மர  நிழல்களில் சிமெண்ட் இருக்கைகள் மற்றும் நிழல் குடைகள்  அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம்  அல்லது நன்கொடையாளர் மூலம் இதற்குரிய நிதியைப் பெற்று பணியை நிறைவேற்ற வேண்டும். மேலும் கடும் கோடை காலமாக இருப்பதால் அங்கு கூடுத லாக குடிநீர் வசதியும் செய்து தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் என். கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மூங்கில் கூடை விற்பனை கடையில் தீ விபத்து

திருப்பூர், பிப். 25 - திருப்பூர் நொய்யல் வீதி கஜலட்சுமி தியேட்டர் அருகே  மூங்கில் கூடை விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற் பட்டு ஆயிரக்கணக்கான மூங்கில் கூடைகள் தீயில் எரிந்து  நாசமானது. திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாப் பாத்தி (55). இவர் திருப்பூர் நொய்யல் வீதி கஜலட்சுமி திரை யரங்கம் அருகே மூங்கில் கூடைகளை பல்வேறு பகுதிக ளில் இருந்து வாங்கி விற்பனை செய்து வருகிறார். மேலும்  சொந்தமாகவும் மூங்கில் கூடைகளை தயாரித்தும் விற்பனை  செய்து வருகிறார். இவ்வாறு தயாரிக்கப்படும் மற்றும் வெளி யில் இருந்து வாங்கப்படும் மூங்கில் கூடைகளை நொய்யல்  வீதியில் உள்ள கடையில் அடுக்கி வைத்துள்ளார். இங்கி ருந்து பல்வேறு பகுதிகளுக்கு இந்த மூங்கில் கூடைகளை எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வருகின்றார். இந்த  நிலையில் இன்று மதியம் பாப்பாத்தி கடைக்கு வெளியே  அமர்ந்து மூங்கில் கூடையை பின்னிக் கொண்டிருந்தார். அப் பொழுது கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறுவதை  பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் கடையிலிருந்து புகை  வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினரும் உடனடியாக தண் ணீரை எடுத்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் உள்ளே மூங்கில் கூடைகள் இருந்ததால் தீ மளமளவன பற்றி  எரிந்தது. இதையடுத்து தீயணைப்புத்துறையினருக்கு தக வல் தெரிவித்தனர், மேலும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ  இடத்திற்கு வந்து பொதுமக்கள் தீ எரியும் பகுதிக்கு செல்லா தவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு  வந்த தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீச்சியடித்து தீயை  கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 20 நிமிட போராட்டத் திற்கு பிறகு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ  விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான மூங்கில்  கூடைகள் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்து குறித்து திருப் பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். மேலும் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து  ஏற்படுத்தியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரி யவந்துள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ள னர்.

ரூ.8.5 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம்

தாராபுரம், பிப். 25- அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 8.5 லட் சத்திற்கு மக்காச்சோளம் ஏலம் போனது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியத்தில்  ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. தற்போது அலங்கி யம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மக்கா சோளத்தை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங் கேற்றனர். அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு  ரூ. 2 ஆயிரத்து 155 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ. 2 ஆயி ரத்து 146 க்கும் விலை போனது. மொத்தம் 40 ஆயிரம் கிலோ  மக்காச்சோளம் ரூ. 8 லட்சத்து 56 ஆயிரத்து 898 க்கு விற்பனை யானது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை ஒழுங்குமுறை விற் பனை கூட மேற்பார்வையாளர் அருள்குமார் செய்திருந் தார்.

பூட்டிய வீட்டில் திருடிய 3 பேர் கைது

அவிநாசி, பிப். 25- அவிநாசி அருகே தெக்க லூரில் பூட்டிய வீட்டில் திரு டிய 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். அவிநாசி போலீஸார் ஆட்டையாம்பாளையம் அருகே வாகனச் சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப் போது சந்தேகப்படும் படி யாக இருசக்கர வாகனத்தில்  வந்த 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், கடந்த இரு நாட்களுக்கு முன் தெக்கலூர் ஓம் சாந்தி  நகரில் பூட்டியிருந்த பரிமளா  தேவி(46). என்பவரது வீட்டிற் குள் புகுந்து, உள்ளிருந்த 8  பவுன் தங்க நகையைத் திரு டிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது  அவிநாசி போலீஸார் வழக் குப்பதிவு செய்து, சேலம் மேட்டூரைச் சேர்ந்த குணசே கரன்(24), அபிமன்யு(21), சேலம் சங்ககிரியைச் சேர்ந்த  மோகன் ராஜ் (22) ஆகி யோரை வெள்ளியன்று கைது செய்தனர்.

மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

அவிநாசி, பிப்.25- அவிநாசி அருகே அவிநாசிலிங்கம் பாளையத்தில் மின்சா ரம் தாக்கி பெயிண்டர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். திருப்பூர் அருகே  அனுப்பர்பாளையம்புதூர் கவிதாலட் சுமிநகரை  சேர்ந்தவர்  ராஜகோபால் மகன் நாகராஜ்(46). பெயிண்டர். இவர், அவிநாசிலிங்கம்பாளையம் பகுதியில் உள்ள கந்தசாமி என்பவருடைய கட்டடத்தில்,  வேலை செய்து  வந்தார். வெள்ளிக்கிழமை கட்டடத்தின் மேல் ஏறி வேலை  செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்கம் பத்தில் இருந்து மீட்டருக்கு வரும்  மெயின் ஒயரை பிடித்து விட்டார். பழைய ஒயர் என்பதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ  இடத்திலேயே   பெயிண்டர்  நாகராஜ் உயிரிழந்தார். இது  குறித்து அவிநாசி போலீஸார்    வழக்கு பதிவு செய்து விசாரிக் கின்றனர்.

பல்லடம் பதிவு அலுவலகத்தில் ரூ.25ஆயிரம் லஞ்சம் கேட்பதாக புகார்

திருப்பூர், பிப். 25 – பல்லடம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பூர்வீக நிலத்தை  பாக சாசனம் ஆவணம் பதிவு செய்வதற்கு ரூ.25 ஆயிரம் லஞ் சம் கேட்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க பல்லடம் ஒன்றி யச் செயலாளர் வை.பழனிசாமி குற்றஞ்சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயி கள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் இந்த புகார் மனுவை அவர்  அளித்தார். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:  பல்லடம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பூர்வீகமாக உள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை மூன்று பேருக்குப் பிரித்து  பாக சாசனம் ஆவணம் பதிவதற்கு, அரசுக்குச் செலுத்த வேண் டிய தொகை போக ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்கும் நிலை  உள்ளது. பாக சாசனம், விடுதலைப் பத்திரம், பரிவர்த்தனை பத்திரம், கிரையம் போன்ற ஆவணங்களுக்கு அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகைக்கு மேல் பணம் கேட்பதை உட னடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வை.பழனிசாமி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தேயிலை எஸ்டேட்டில்  தரை இறங்கிய ஹெலிகாப்டர்

உதகை, பிப்.25- கூடலூர், தேவாலா பகுதியில் உள்ள தேயிலை எஸ் டேட்டில் தரை இறங்கிய ஹெலிகாப்டரை கண்டு பள்ளி மாண வர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.  நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் தேயிலை மற்றும் விவசாய தொழில்களை செய்து தங்களது வாழ்வாதாரத்தை பெரி தும் நம்பியுள்ளனர். இந்நிலையில் கூடலூர் தாலுகாவிற் குட்ப்பட்ட தேவாலா பகுதியில் ரவுஸ்டன் முல்லை தேயிலை எஸ்டேட் இயங்கி வருகிறது. கால் டில்லா நிறுவனத்தின் உரிமையாளர் ராஜி மோடியின் தேயிலை எஸ்டேட்டான ரவுஸ்டன் முல்லை எஸ்டேட் தேவாலா பகுதியில் உள்ளது. இந்நிலையில், வெள்ளியன்று இந்த எஸ்டேட்டிற்கு அதன் உரிமையாளர் ராஜி மோடி ஹெலிகாப்டர் மூலம் தனது எஸ்டேட் பகுதிக்கு வந்தார். ஹெலிகாப்டர் வருவதை அப் பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் வியப்புடனும் ஆச்சரியத்துடனும் பார்த்தனர்.

ராகி விற்பனை செய்ய சான்றிதழ் தருவதற்கு தாமதம்
வருவாய்த் துறையினர் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

தருமபுரி, பிப்.25- ராகி விற்பனை செய்வதற்கு வருவாய்த் துறையினர் சான்றிதழ் வழங்க கால தாம தம் செய்வதாக விவசாயிகள் குறைதீர் கூட் டத்தில் தருமபுரி மாவட்ட விவசாயிகள் குற் றச்சாட்டினர்.  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கி.சாந்தி தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயி கள் கடந்த மாதம் கொடுக்கப்பட்ட மனுக் களின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவ டிக்கைகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்த னர். இதில், விவசாய சங்க பிரதிநிதிகள் பேசுகையில், மாவட்டத்தில் கால்நடைக ளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளது. இதற் காக சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசிகளை போட வேண்டும். மேலும் 100 மாடுகள் இருந் தால் மட்டுமே தடுப்பூசி போட முடியும் என்ப தால், சுற்று வட்டார பகுதியில் உள்ள மாடு களை ஓரிடத்தில் சேர்த்து முகாம்களை நடத்த வேண்டும், என்றனர். மேலும், தருமபுரி மாவட்டத்தில் ராகி  கொள்முதல் நிலையத்தில் ராகி விற்பனை செய்வதற்கு வருவாய்த் துறையினர் சான்றி தழ் வழங்க கால தாமதம் செய்வதாகவும், நாள் கணக்கில் அலைக்கழிப்பதாக விவசாயி கள் புகார் தெரிவித்தனர். யானை மற்றும்  காட்டு பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தை  கட்டுப்படுத்த வேண்டும். வனத்துறையினர் இழப்பீட்டு தொகையை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். முன்னதாக, இக்கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் சு‌.அனிதா, வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, கூட்டுறவு சங்கங் களின் இணைபதிவாளர் ராமதாஸ், உள் ளிட்ட தொடர்புடைய அலுவலர்களும் விவ சாயிகளும் கலந்து கொண்டனர்.

கேத்தி வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ

உதகை, பிப்.25- நீலகிரி மாவட்டம், கேத்தி வனப்பகுதி யில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயால் அப் பகுதி மக்கள் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு நீடிக்கும். குறிப்பாக உதகை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். இது போன்ற சமயங்களில் வனப்பகுதிகள் மற்றும் விளைநிலங்கள் பசுமையை இழந்துவிடும். அப்போது ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்படு வது வழக்கமாகி விடுகிறது. இந்நிலையில், உதகையில் கடந்த சில நாட்களாக நன்றாக பெய்த உறைபனி காரணமாக பல இடங்க ளில் செடி, கொடிகள் கருகி கிடக்கிறது. இதன் காரணமாக கேத்தி, மந்தாடா வனப்பகுதி யில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதில்  சுமார் 3 ஏக்கர் பரப்பளவிலான செடி, கொடி கள் எரிந்தன. இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் காட்டுத் தீயை அணைத்தனர். மேலும், காட்டுத்தீ  அபாயம் உள்ள இடங்களை கண்காணித்து வருகின்றனர். திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ யால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

குறைதீர் கூட்டம்

நாமக்கல், பிப்.25- நாமக்கல் ஆட்சியர் அலு வலகத்தில் பிப்.28 ஆம் தேதி யன்று விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற உள் ளது. நாமக்கல் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், பிப்.28 ஆம் தேதி யன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள் ளது. இதில், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்கள் கோரிக் கைகளை தெரிவித்து பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு கோவை நீதிமன்றத்தில் விசாரணை துவக்கம்

கோவை, பிப். 25-  பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை வெள்ளியன்று கோவை நீதிமன்றத் தில் துவங்கியுள்ளது. விசார ணையை துரிதப்படுத்தி, குற்ற வாளிகளுக்கு உரிய தண்ட னையை பெற்றுத்தர வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. பொள்ளாச்சியில், பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் 2019 ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம் பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக  திருநாவுக்கரசு, சபரி ராஜன், வசந்தகுமார், சதீஷ், மணி வண்ணன் ஆகியோர் கைது செய் யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி அருளானந்தம், ஹேரேன் பால், பாபு, அருண் குமார் ஆகியோரும் கைது செய் யப்பட்டனர். இந்த வழக்கு தமிழ்நாடு காவல் துறை விசாரணை நடத்தி, பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, இத னையடுத்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு விசா ரணை சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் பல்வேறு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, கைது செய்யப் பட்ட 9 பேர் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலை யில், இந்த வழக்கு விசாரணை  கோவை மகளிர் நீதிமன்றத்தில், காணொலி வாயிலாக சாட்சி விசா ரணை நடைபெற்றுள்ளது. குறிப் பாக கைது செய்யப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜ ராகினர். மேலும், பாதிக்கப்பட்ட வர்களும் காணொலி காட்சி மூல மாக ஆஜராகினர். இந்த, வழக்கை விசாரணை ரகசியமாக நீதிபதி நந் தினி தேவி முன்னிலையில்,   வெள்ளியன்று துவங்கப்பட்டுள்ள தாக தகவல் வெளியாகி உள் ளது.  கடந்த அதிமுக ஆட்சியில், பணபலம், அதிகார பலம் ஆகிய வற்றால் பெண்களை ஏமாற்றி பாலி யல் வன்கொடுமை நடைபெற்ற தும், இதில், ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனை அதிகாரத்தில் உள்ளவர் கள் மூடி மறைக்க முயற்சித்த போது,  நாட்டையே உலுக்கிய இந்த பொள்ளாச்சி கொடூர பாலியல் வன் கொடுமை சம்பவத்தை வெளிக் கொண்டு வருவதற்கு மாதர் சங் கம், மார்க்சிஸ்ட் கட்சி பெரும் போராட்டத்தை முன்னெடுத்தது. மேலும், பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மீது அன்றைய அதிமுக அரசு பொய் வழக்கு பதிவு செய்ததும், கோவை நீதிமன்றத்தில் மூன்றாண்டுக ளுக்கு மேலாக நடைபெற்று வந்த  இந்த வழக்கில் இருந்து வாலிபர் சங்கத்தின் அன்றைய மாநிலச் செயலாளர் எஸ்.பாலா உள்ளிட்ட வர்கள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப் பிடத்தக்கது.