districts

img

விதி மீறி கனிமங்கள் ஏற்றிச் சென்ற 70 வாகனங்களுக்கு அபராதம்

நாகர்கோவில், ஜூன் 2

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்து உரிய அனுமதி சீட்டுகள் இல்லாத  வாகனங்களை கைப்பற்றி வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டு நர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்காகவும், அனுமதிக் கப்பட்ட அளவினை விட அதிக பாரம் கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களை கைப்பற்றி மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்காகவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தனி வட்டாட்சியர்கள் தலைமையில் 7 சிறப்பு குழுக்கள்  மாவட்ட ஆட்சியர் ஆணையின் படி அமைக்கப் பட்டுள்ளது. மேற்படி சிறப்பு குழுக்களில் வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    மே 5 முதல் மே 31 வரை தனி வட்டாட்சியர்கள் தலைமையி லான 7 சிறப்பு குழுவினரால் மாவட் டத்தில் காவல்கிணறு, ஆரல் வாய்மொழி, தோட்டியோடு, இறச்சகுளம், அழகியபாண்டி புரம், வெள்ளமடி, குளச்சல், கருங் கல், புதுக்கடை, கொல்லங் கோடு, மார்த்தாண்டம், களியக்கா விளை, படந்தாலுமூடு, நெட்டா, செங்க விளை, சுருளகோடு, சித்தி ரம்கோடு, குலசேகரம், சாமியார் மடம், ஆற்றூர், அருமனை, களியல் ஆகிய பகுதிகளில் திடீர் தணிக்கை மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 273 வாகனங்களை சோதனை செய்ததில் 29 கனரக வாகனங்க ளில் அனுமதிக்கப்பட்ட அள விற்கும் கூடுதலாக கனிமங்கள் ஏற்றப்பட்டிருந்தது கண்டறி யப்பட்ட 29 வாகனங்களும், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அனுமதியின்றி  கனிமங்கள் ஏற்றிச் சென்ற 195 வாகனங்களை சோதனை செய்ததில்  41 வாக னங்களில் அனுமதிக்கப்பட்ட அள விற்கும் கூடுதலாக கனிமங்கள் எடுத்துச்சென்றது கண்டறியப்பட்டு மொத்தம்  70 வாகனங்களும் கனிமங்களுடன் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளி மாவட்டங்களி லிருந்து கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றியோ அல்லது உரிய அனுமதி சீட்டுகளோ இல்லாமல் வருகின்ற வாகனங்களை சிறப்பு குழு தனி வட்டாட்சியர்கள், காவல் துறையினர் மற்றும் மதுரை மண்டல பறக்கும் படை துணை இயக்குநர் கொண்ட குழுவின ரால் தினசரி கண்காணிக்கப்பட்டு வருகிறது.  

   விதி மீறல்களில் ஈடுபடும் வாகன உரிமையாளர்களின் வாகன உரிமத்தை ரத்து செய்ய வும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.