districts

img

விதிமுறையை மீறி இயக்கப்பட்ட 28 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்

சேலம், ஜன.17- பொங்கல் பண்டிகையையொட்டி, சேலம் சரகத்தில் விதிமுறையை மீறி  இயக்கப்பட்ட 28 ஆம்னி பேருந்துக ளுக்கு போக்குவரத்து அதிகாரிக ளால் அபராதம் விதிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்ட ணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து தமிழ கத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள போக் குவரத்து அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலகர்களுக்கு உத்தரவிட்டனர். சேலம் சரகத்தில் மேட்டுப்பட்டி, கருப்பூர், தொப்பூர் சுங் கச்சாவடிகளிலும் புதிய பேருந்து நிலையத்திலும் கடந்த ஜன.12 ஆம் தேதியில் இருந்து ஜன.15 ஆம் தேதி வரை வட்டார போக்குவரத்து அலுவ லர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ச்சி யாக வாகன தணிக்கையில் ஈடுபட்ட னர்.  இந்த தொடர் சோதனையில் வாக னங்கள் சோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில், கண்கூசும் முகப்பு விளக்குளை பயன்படுத்தியது, அவசர கதவு செயல்படாதது, காற்று ஒலிப் பான் பயன்படுத்தியது, சாலை வரி செலுத்தாமல் இயக்கியது, முறை யான ஆவணங்கள் இல்லாதது உள் ளிட்ட விதிமுறையை மீறி இயக்கிய 28 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வரி செலுத் தாமல் இயக்கிய 3 ஆம்னி பேருந்து கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போக்குவரத்து அதி காரிகள் கூறுகையில், பொங்கல் பண் டிகையையொட்டி சேலம் சரகத்தில் நடந்த சிறப்பு வாகன தணிக்கையில், விதிமுறையை மீறி இயக்கிய 28  ஆம்னி பேருந்துகளுக்கும், 109 வாக னங்களுக்கும் ரூ.1.51 லட்சம் அபராத மும், வரியாக ரூ.2.10 லட்சமும் வசூ லிக்கப்பட்டது. 3 ஆம்னி பேருந்துகள் உட்பட 4 வாகனங்கள் பறிமுதல் செய் யப்பட்டன, என்றனர்.