தருமபுரி, ஆக.2- அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி கள் வழங்கும் விழா நடைபெற்றது. அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்ற விழாவில், பள்ளி தலைமை ஆசிரியை ராணி தலைமை வகித்தார். அரூர் பேரூராட்சித் தலைவர் இந்திராணி தன பால், துணை தலைவர் சூர்யா தனபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில், அரசு மகளிர் பள்ளி யில் படிக்கும் மாணவிகள் 257 பேருக்கும், அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 320 பேருக்கும் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி களை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் வழங் கினார். இந்த விழாவில் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், ஒன்றியக்குழுத் தலைவர் பொன்மலர் பசுபதி, தலைமை ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வே.முத்தம்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் 190 மாணவ, மாணவியருக்கு விலை யில்லா மிதி வண்டிகளை பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி வழங்கினார். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.