நாமக்கல், ஏப்.3- போதிய மழை இல்லாத காரணத்தால், கோடைகாலத்தில் அதிகமாக விளையக்கூ டிய, நுங்கு வரத்து சரிந்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் தற்போது பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன் பாகவே, வழக்கத்திற்கு மாறாக அதிகளவு வெயில் வாட்டி வதைக்கிறது. பொதுமக்கள் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக இயற்கையாக கிடைக் கக்கூடிய நுங்கு, இளநீர், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வாங்கி வருகின்றனர். இந்நிலையில், போதிய மழை இல்லாததால் நுங்கு வரத்து குறைந்துள்ளதாக வியா பாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகு றித்து பள்ளிபாளையம் பிரதான சாலையில் நுங்கு விற்பனையில் ஈடுபட்டு வரும் முரு கன் என்பவர் கூறுகையில், எப்போதும் மார்ச் மாதத்திலேயே நுங்கு வரத்து அதிகளவு இருக்கும். திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு நுங்குகளை விவசா யிகளிடமிருந்து நாங்கள் வருடந்தோறும் வாங்கி வருகிறோம். ஆனால், இந்த ஆண்டு போதிய அளவு மழை இல்லாததாலும், அதி களவு வெயிலின் காரணமாகவும் நுங்கு வரத்து வெகுவாக குறைந்து விட்டது. தற் போது தேவை அதிகரித்தும், வரத்து இல்லாத தால் நுங்கு ‘டிமாண்ட்’ ஏற்பட்டுள்ளது. சீசன் தவறி நுங்கு கிடைப்பதால் நுங்கு வில் உள்ள இயற்கையான சத்துக்கள் மற்றும் ருசி இல்லாத நிலை ஏற்படும் சூழல் உருவாகி யுள்ளது. மேலும், கிராமப்புறப் பகுதிகளில் பனை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகை யான மரங்கள் அழிக்கப்பட்டு, தற்போது அவை யாவும் விளை நிலங்களாக மாறி வரும் நிலை ஏற்பட்டு வருகிறது. பொது மக்களின் கவனமும் செயற்கை பானங் களை தவிர்த்து, இயற்கையான உணவு பழக் கத்தை நாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த மாதம் முதல் சீரான வகையில் நுங்கு வரத்து இருக்கும் என எதிர்பார்க்கிறேன், என்றார்.