சேலம்,செப்.27- சிலிண்டர் தொகையை பில்லில் உள்ள முழு தொகையும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழு வதும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. 1993 சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சிலிண்டர் தொகையை பில்லில் உள்ள முழுத் தொகையும் வழங்கிட வேண்டும். தமிழக முழுவதும் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அங்கன்வாடி திட் டத்தை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. காலை சிற்றுண்டி திட்டத்தை அங்கன்வாடி துறை யிடமே வழங்க வேண்டும். அங்கன் வாடி ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாகி குறைந்த பட்சம் ஊதியமாக 21,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் சார்பில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எம்.சரோஜா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பா.சாவித்திரி, மாவட்டத் தலைவர் எஸ்.வசந்த குமாரி, மாவட்டச் செயலாளர் ஆ. மனோன்மணி, மாவட்ட பொரு ளாளர் மேரி ஆகியோர் உரையாற் றினர். இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன், மாவட்டத் தலைவர் டி. உதய குமார், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.கே.தியாக ராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இப்போராட்டத்தில், 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் பங்கேற்றனர்.
தருமபுரி
இதேபோன்று அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். மாவட்டத் தலைவர் எஸ். ராஜம்மாள் தலைமை தாங்கி னார். இதில், மாநிலச் செயலாளர் எம்.லில்லிபுஷ்பம், மாவட்ட செய லாளர் சி.கவிதா, பொருளாளர் என்.தெய்வானை, மாவட்ட நிர்வாகிகள்,கே.காளிஸ்வரி, ஆர்.சத்யா, சிஐடியு மாநிலக்குழு உறுப் பினர் சி.கலாவதி, மாவட்ட இணைச் செயலாளர் ஆனஸ்ட்ராஜ் ஆகி யோர் உரையாற்றினர். ஈரோடு இதேபோன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை தலைவர் எஸ்.மணிமாலை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ்.ராதாமணி, மாவட்ட செயலாளர் எஸ்.சாந்தி, பொருளாளர் எம்.அமுதா ஆகி யோர் கோரிக்கைகளை வலியு றுத்தி உரையாற்றினர். சகோதர சங்க நிர்வாகிகள் வாழ்த்தி உரை யாற்றினர்.