தருமபுரி, பிப்.6- சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தர வின்படி, தினக்கூலியாக ரூ.653 வழங்க வேண் டும் என வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதந்தோறும் தொழிலாளர் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் பிஎப் பணத்தை உரிய அலு வலகத்தில் செலுத்த வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி தூய்மைப் பணி யாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.653 வழங்க வேண்டும். தொழிலாளர் ஓய்வுபெறும் நாளன்றே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்க ளுக்கு மாத சம்பள பட்டியல் வழங்க வேண் டும். ஒப்பந்த தொழிலாளர்களின் பிப், இஎஸ்ஐ கட்ட மறுக்கும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர விரிவாக்கத்திற்கு ஏற் றார்போல் புதிய பணியாளர்களை பணிய மர்த்த வேண்டும். தளவாடப் பொருட்களை தரமானதாக வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வார விடுமுறை மற் றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பாது காப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். அதிகாரிகளை ஆறு மாதத்திற்கு ஒருமுறை கோட்டம் வாரியாக மாறுதல் செய்ய வேண் டும். பெண் தொழிலாளர்களை பணியிடத்தில் கண்ணியமாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங் கத்தின் மாவட்டத் தலைவர் சி.குட்டியப்பன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செய லாளர் சி.நாகராசன், மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் டி.வெங்கடேசன், மாவட்ட நிர்வாகிகள் திருப் பதி, ஜானகி, வள்ளி ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத் தில் திரளான தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர்.