கோவை, டிச.28- உள்ளாட்சி அமைப்புகளில் பணி யாற்றும் தொழிலாளர்களுக்கு, நீதி மன்ற உத்தரவின்படி குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஐடியுவினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். நிரந்தர தொழிலாளர்களுக்கு சரண்டர் விடுப்பு வழங்க வேண்டும். அர சாணை 152ஐ திரும்பப்பெற வேண்டும். தினக்கூலி ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோ கரன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநில உதவிச்செயலாளர் கே.ரங்கராஜ், மாவட்டச் செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலுசாமி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.