பொள்ளாச்சி, அக்.31- நூறுநாள் வேலை பணி யாளர்களுக்கு மூன்று மாதங் களாக ஊதியம் வழங்காத நிலையில், உடனடியாக வழங்ககோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங் கத்தினர் கோட்டாச்சியரிடம் மனு அளித்தனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச்சட்டத்தின் கீழ் கிணத்துக் கடவு, பொள்ளாச்சி வடக்கு, பொள் ளாச்சி தெற்கு ஆகிய ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் பயனாளிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கபட வில்லை. இதுவரை வழங்கபடாத ஊதியத் திற்கு சட்டபடி வட்டி சேர்த்து தர வேண்டும். ஆதார் லிங்க் பிபிஎல் லிஸ்ட் என காரணம் காட்டி வேலைக்கு வரும் பயனாளிகள் எண் ணிக்கையை குறைப்பதை கைவிட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். இவ்வியக்கத்தில், விதொச தாலுக்காச் செயலாளர் கே.ஏ.பட்டீஸ்வரமூர்த்தி, மாவட் டப் பொருளாளர் கே.மகாலிங்கம், தாலுக்கா குழு உறுப்பினர் மாணிக்கம் கௌதம், நல் லாம்பள்ளி சதீஸ், முத்துமணி உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.