உடுமலை ஜூன் 22- உடுமலை அரசு மருந்துவமனையில் தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்ற நக ராட்சி நிர்வாகம், மற்றும் மருத்துவமனை நிர் வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தால் பொதுமக்கள் அவதி அடைந்துள் ளனர். உடுமலை அரசு மருத்துவமனையில் பொது நுழைவாயில் பகுதியில் மருத்துவம னையில் கழிப்பிட கழிவுநீர் சூழ்ந்து இருந்த தால் பொதுமக்கள் மற்றும் அவசர வாகனங் கள் செல்ல முடியவில்லை. வ.உ.சி வீதியில் சுமார் 2.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் 14க்கும் மேற் பட்ட சிகிச்சைப் பிரிவுகளும் 3 அறுவை சிகிச் சைப் பிரிவு மற்றும் சித்த மருத்துவ பிரிவு உள்ளது. இம்மருந்துவமனையில் தினமும் உடுமலை மடத்துக்குளம் தாலூகா பகுதி யில் இருந்தும் மேற்குத் தொடர்ச்சி மலைப்ப குதியில் இருக்கும் மலைவாழ் மக்கள் குடியி ருப்பு பகுதியான குழிப்பட்டி தளிச்சி மாவ டாப்பு தளிச்சிவயல் மற்றும் கோடந்தூர் உள் ளிட்ட செட்டில் மெண்ட் பகுதியின் மலை வாழ் மக்கள் மேலும் தினமும் ஆயிரக்கணக் கான பொதுமக்கள் சிகிச்சைக்காகவும், 200க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிக ளாக சிகிச்சை பெற்று வருகின்றர்.
இவ்வாறு பொதுமக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் மருத்துவமணையில் சுகாதாரம் இல்லாமல் இருப்பது அனைவரையும் கவலையடை யச் செய்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறிய தாவது:அரசு மருத்துவமனையில் காலை முதல் மாலை வரை கழிப்பிட கழிவுநீர் நுழை வாயில் பகுதியில் தேங்கி இருக்கிறது இந்த பகுதியில் தான் மருந்தகம், சித்த மருத்துவ பிரிவு ,சவக்கிடங்கு மற்றும் அவசர சிகிச் சைப் பிரிவு உள்ளது . உடுமலை நகராட்சி நிர் வாகம் கழிவுகளை வெளியேற்ற போதிய கவனம் செலுத்துவது இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகத்தைக் கேட்டால் பாதாளச் சாக்கடை அடைப்பு காரணமாக இப்படி உள்ளது, நகராட்சி நிர்வாகத்திற்குத் தகவல் தரப்பட்டது என்று கூறுகிறார்கள். பொதுமக்கள் நோய் நீங்க மருத்துவம னைக்கு வந்தால் புதிய நோய் வரும் வகை யில் மருத்துவமனையின் சுகாதாரம் உள் ளது மேலும் மருத்துவமனையே இப்படி இருந்தால் மற்ற பகுதிகளை எப்படி சுத்தப்ப டுத்துவார்கள் என்ற கேள்வியை எழுப்பி யுள்ளார்கள்.