districts

img

10 ஆண்டுகளாக பராமரிப்பு செய்யப்படாத ஆரம்ப சுகாதார நிலையம்: கேள்விக்குள்ளாகும் நோயாளிகளின் பாதுகாப்பு

உடுமலை, ஜன.10- 10 ஆண்டுகளுக்கு மேலாக பராம ரிப்பு செய்யப்படாமல் உள்ள கொங்க லக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய கட் டித்தை பராமரிப்பு செய்து தரம் உயர்த்த  வேண்டும் என கோரிக்கை எழுந்துள் ளது. உடுமலை பள்ளபாளையம் ஊராட்சி கொங்கலங்குறிச்சியில் ஆரம்ப சுகாதார  நிலையம் உள்ளது.  இது, பள்ளபாளையம், ஆலாம்பாளை யம், சிவா நகர் மற்றும் கொங்கலக் குறிச்சி என பத்தாயிரத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ள பகுதியில்   செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு தலைமை செவிலியர் குடும்பத்துடன் தங்கும் வகையில் வீடு மற்றும் பிரசவம் பார்க் கும் வகையில் இரண்டு படுக்கைகள் கொண்ட கட்டிடமாக உள்ளது. இந்த கட் டிடம் பத்து ஆண்டுகளுக்கு மேல் பரா மரிப்பு செய்யப்படாமல் உள்ளதால், கட் டிடத்தின் மேல் இருக்கும் தண்ணீர் தொட்டியில் கம்பிகள் வெளியே தெரிகி றது. இப்படி பராமரிப்பு இல்லாமல் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண் கள் தினந்தோறும் வருகை தருவதால் பராமரிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பொது மக்கள் தெரிவிக் கையில், கொங்கலக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் ஒரு தலைமை செவிலியர் தங்கி இருந்த போது எங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது. ஆனால் இப்போது செவிலி யர் இங்கு தங்காததால், எந்த நேரத் தில் வருகிறார்கள் என்று தெரிவது இல்லை. இதனால் பெரும்பாலும் சுகா தார நிலையம் மூடியே உள்ளது. இத னால் நாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பி  செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே முழு நேரம் இங்கு தங்கும்  வகையில் செவிலியர்கள் நியமனம் செய்ய வேண்டும். சுற்று சுவர்க்கு மட் டும் கலர் அடித்து விட்டு, கட்டிடத்தை பராமரிக்காமல் உள்ளது குறித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும், முறையாக பராமரிப்பு செய்ய வேண் டும். என்று தெரிவித்தனர்.