districts

img

தண்ணீர் வரவில்லை, கழிவறைகள் சுகாதாரமில்லை ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பயணிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஏப். 8- தண்ணீர் இல்லை, கழிவறை சுகாதார மற்ற நிலையில் ரயில் சேவை உள்ளதாக  குற்றம்சாட்டி ஈரோட்டில், சிஐடியு, விச,  விதொச அமைப்பினருடன் ரயில் பயணிகள்  திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, கழிவ றையை சுத்தம் செய்தும், தண்ணீர் நிரப்பி யும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை  எடுத்தது. தலைநகர் தில்லியில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, சிஐடியு, விச, விதொச சார்பில் ஏப்ரல்  5 நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக் கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில், நாடு முழுவதும்  இப்பே ரணியில் பங்கேற்றபின், கேரள மாநிலத்தில் இருந்தும், தமிழகத்தின் ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு தில்லியில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திரும் பினர்.  புது தில்லியில் இருந்து ஈரோடு வந்த  கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்.  12626)  எஸ் 1 முதல் 7 வரையிலான பெட்டிக ளில் கழிவறை மற்றும் வாஸ்பேஷனில் தண் ணீர் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.  புது தில்லியில் இருந்து இரண்டு நாளாக  பயணம் செய்யும் பயணிகள் இயற்கை  உபாதைகளை கழிப்பதில் சிரமம் ஏற்பட்டது.   குறிப்பாக சனியன்று திருப்பதி ரயில் நிலை யத்திலிருந்து கழிவறை உள்ளிட்ட இடங் களில் தண்ணீர் வரவில்லை இதனால்  ரயில் முழுக்க துர்நாற்றம் வீசியது.

இதனால்,  பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.  பயணிகள் 139 எண்ணில் புகார் செய்தும்  நடவடிக்கை இல்லை. டிக்கெட் பரிசோத கரிடம் புகார் செய்த போது ஜோலார்பேட்டை  ரயில் நிலையத்தில் நீர் நிரப்பப்படும் என்று  தெரிவித்தார் அங்கேயும் நீர் நிரப்பப்படாத தால் பயணிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர்.   இந்நிலையில், ஈரோடு ரயில் நிலையத் தை அடைந்த போது, தமிழ்நாடு விவசாய சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் அ.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,  சிஐடியு, விவ சாய தொழிலாளர் சங்க திருப்பூர், ஈரோடு  மாவட்டத்தினர் பங்கேற்றனர். இவர்க ளோடு ரயிலில் பயணம் செய்த இதர  பயணிகளும் பங்கேற்றனர். இதை யடுத்து காவல்துறையினர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவறையை சுத்தம் செய்யாமலும், தண்ணீர் நிரப்பா மலும்  ரயிலை இயக்க விடமாட்டோம் என உறு திபட தெரிவித்தனர். இதனையடுத்து, உடன டியாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன் வைத்த கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகம் துரிதகதியில் நிறைவேற்றியது.  தொழிலாளர்களுக்காக, விவசா யிகளுக்காக சொந்த செலவில் தலைநகர் சென்று போராடிவிட்டு, ரயிலில் திரும்பிய வர்கள், இறங்க வேண்டிய இடம் வந்த பிற கும், மற்ற பயணிகளின் வசதிக்காக போராட் டத்தில் ஈடுபட்டு கோரிக்கையை நிறைவேற் றித்தந்த செங்கொடி இயக்கத்தவர்களின் நட வடிக்கையை கண்டு ரயில் பயணிகள் மெய்சி லித்தனர்.