districts

img

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஆக.28- பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர சிறப்பா சிரியர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள  பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநி லச் செயலாளர் ராஜா தேவகாந்த் தலைமை ஏற்றார். இதில்,  கடந்த 13 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் 12,200 ரூபாய் நிய மனத்தில் பகுதி நேர ஆசிரியர்களாகவும், வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவுகளில் 10,000 ரூபாய் தொகுப்பு ஊதியத் தில் பணியாற்றி வருகின்றனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து  போராடியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் தங்களது கோரிக்கை நிறை வேற்றப்படும், என தெரிவித்த நிலையில் இரண்டு ஆண்டு களாகியும் தங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் அடுத்த மாதம் 21ஆம் தேதி முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் தீர்வு கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என கோரிக்கை களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.