districts

img

ஈரோட்டில் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஆய்வு

ஈரோடு, ஜன. 11- ஈரோடு மாவட்டத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும்  வளர்ச்சித் திட்டப்பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி  குழுவினர் ஆய்வு செய்த னர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட காந்திஜி  சாலையில் அமைந்துள்ள மாவட்ட தீய ணைப்பு நிலையம், சோலார் பகுதியில் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம், சென்னிமலை சாலையில் உள்ள கால்நடை தீவன தொழிற் சாலையில் கச்சாபொருள் இருப்பு கிடங்கு ஆகியவற்றை, சட்டமன்ற பேரவை உறுதி மொழி குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர், மாவட்ட ஆட்சி யர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பெருந்துறை அரசு ஈரோடு மருத் துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு செயல்படும் அவசர சிகிச்சை பிரிவு, புற நோயாளிகள், உள்நோயாளிகள் பிரிவு, பிரசவ பிரிவு, இரத்த வங்கி, மருந்தகம், எலும்பு முறிவு  பிரிவு ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். அத்துடன், நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.  இதனைத் தொடர்ந்து, பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தாட்கோ கட்டடங்களையும் மற்றும் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள நல்லா ஓடையினையும் பார் வையிட்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியர்  அலுவலக கூட்டரங்கில், அரசு உறுதிமொ ழிக்குழு தலைவர் வேல்முருகன் தலைமை யில் அனைத்துத் துறை அலுவலர்க ளுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது, வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட வேண்டும். அவை பொதுமக்களுக்கு முழு மையாக சென்றடையும் வகையில், அனைத் துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து  பணியாற்றிட வேண்டும் என தெரிவிக் கப்பட்டது. தொடர்ந்து, நிறைவேற்றப்பட்டுள்ள உறுதிமொழிகள், நிலுவையில் உள்ள உறுதி மொழிகளின் தன்மை குறித்து துறை சார்ந்த  அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இந்நிகழ்வின்போது, ஈரோடு  நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேச மூர்த்தி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஜவகர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.