districts

கோவை அரசு மருத்துவமனையில் புதிய பன்னடுக்கு கட்டடம்

கோவை, டிச.28- கோவை அரசு மருத்துவமனை யில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் கட் டப்பட்டும் வரும் பன்னடுக்கு கட்ட டம் ஜனவரியில் பயன்பாட்டுக்கு வர வுள்ளது என தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவர்  க.அன்பழகன் கூறினாா். தமிழ்நாடு சட்டப்பேரவையின் மதிப்பீட்டுக்குழுத் தலைவரும், கும் பகோணம் சட்டப்பேரவை உறுப்பி னருமான க.அன்பழகன் தலைமை யில், தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப் பீட்டுக்குழுவினர் கோவையில் பல் வேறு இடங்களில் ஆய்வு மேற் கொண்டனர். இதன்ஒருபகுதியாக, கோவை அரசு மருத்துவமனையில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்டு வரும் புதிய கட்டடம், அவசரப் பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்த னர். இதைத்தொடர்ந்து, சட்டப்பே ரவை மதிப்பீட்டுக்குழுத் தலைவர் க. அன்பழகன் கூறுகையில், கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2019  ஆம் ஆண்டில் ரூ.110 கோடி மதிப்பீட் டில் தொடங்கப்பட்ட பன்னடுக்கு கட் டடப் பணிகள் ஜனவரியில் பொங்கல்  பண்டிகைக்குள் நிறைவடையும் என  பொறியாளர்கள் கூறியுள்ளனர். இந்த கட்டடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.  இந்த இரண்டு மருத்துவமனை களையும் இணைக்கும் வகையில் பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அது  குறித்து பரிசீலனை செய்து கட்டி  கொடுக்கப்படும். இந்த மருத்துவ மனையில், நாள்தோறும் இருதய அறுவை சிகிச்சை செய்யத் தேவை யான வசதிகளை செய்ய இக்குழு மூலம் பரிந்துரை செய்யப்படும், என் றார். இந்த ஆய்வின்போது, மதிப் பீட்டுக்குழுவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, அரசு மருத்துவ மனை முதல்வர் நிர்மலா, மருத்துவர் கள், துறை சார்ந்த அதிகாரிகள் உடனி ருந்தனர்.