districts

img

காலமுறை ஊதியம் கேட்டு பூங்கா, பண்ணை ஊழியர்கள் ஆவேசம்

உதகை, ஜன.23- தோட்டக்கலைத்துறையில் பணி யாற்றும் பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்களுக்கு காலமுறை ஊதி யம் வழங்கக்கோரி உதகையில் பண்ணை தொழிலாளர்கள் ஆர்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  தோட்டக்கலைத்துறையில் பணி யாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு  காலமுறை ஊதியத்தை காலமுறை  ஊதியமாக மாற்றி வழங்க வேண் டும். பணி மூப்பு அடிப்படையில் பத் தாண்டு பணிக்காலம் முடிந்தவர்க ளுக்கு ஒரு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களுக்கு கல் வித்தகுதியின் அடிப்படையில் காலி யாக உள்ள மஸ்தூர் மற்றும் அடிப் படை பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். டேன்ஹோடா பண்ணை பணியாளர்களை தமிழ் நாடு அரசு நிதித்துறை ஆணை எண்  எம்.எஸ். எண் 287-ன்படி பண்ணை  பணியாளர்களாக அங்கீகரிக்க வேண்டும். தோட்டக்கலைத்துறை யில் தினக்கூலியாக 5 ஆண்டுக ளுக்கு மேல் பணியாற்றும் பூங்கா  பண்ணை பணியாளர்களை பணி  நிரந்தரம் செய்ய வேண்டும். தோட்டக் கலைத்துறையில் தினக்கூலி பணி யாளர்களாக பணியாற்றும் பண்ணை  மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கிய குறைந்தபட்ச கூலி வழங்க வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி உதகை தாவரவி யல் பூங்கா முன் பண்ணை பணியா ளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்பாட்டத்திற்கு, தமிழ் நாடு அரசு தோட்டக்கலைத்துறை பூங்கா மற்றும் பண்ணை பணியாளர் கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணி தலைமை வகித் தார். இதில், தொழிற்சங்க கூட்ட மைப்பு நிர்வாகிகள் மோகன்குமார், கருணைராஜ், வாசு, ரமேஷ் உள் ளிட்டோர் உரையாற்றினர். இதில், திர ளானோர் பங்கேற்று கோரிக்கை முழக் கங்களை எழுப்பினர்.